Advertisement

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – கடன் இணைத்த மானியத் திட்டம்

Video Link : https://youtu.be/m6Ltr9g4130

Video Link: https://youtu.be/FslxptAdIbY

மக்கள் தங்களுடைய கனவு இல்லத்தைப் பெறுவதற்கு உதவுவதற்காக, மாண்புமிகு பிரதமர் ஒரு முழுமையான, முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு நோக்கத்தை அறிவித்துள்ளார், 17 ஜூன் 2015ல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பெயர், ‘பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – எல்லாருக்கும் வீடு.’

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் முக்கியமான உட்பிரிவுகளில் ஒன்று, குறைந்த வருவாய்க் குழு/பொருளாதாரரீதியில் பலவீனமான பிரிவு (EWS/LIG) மற்றும் நடுத்தர வருவாய்க் குழு (MIG – I & II) ஆகியவற்றுக்கான கடன் இணைத்த மானியத் திட்டம் (CLSS) இந்தத் திட்டத்தின்கீழ், கடன் வழங்கும் அமைப்புகளின்வழியாக மத்திய அரசு தகுதியுள்ள பலன்பெறுவோருக்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதி உதவி 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சட்ட உரிமை பெற்ற அனைத்து நகரங்கள், அவற்றின் அருகிலுள்ள திட்டப் பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலை அரசாங்கம் அவ்வப்போது மேம்படுத்திவரும்.

வட்டி மானியமானது இரண்டு மத்திய ஒருங்கிணைப்பு ஏஜென்ஸிக்களின் வழியே வழங்கப்படுகிறது – தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) மற்றும் வீட்டுவசதி & நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (HUDCO). முதன்மை அரசு அமைப்புகள், கடன்வழங்கும் அமைப்புகளுக்கு மானியத்தை வழங்குகின்றன, அவை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மானியம் பெற உதவுகின்றன.

IIFL வீட்டுக்கடன்கள் ஓர் அங்கீகாரம் பெற்ற கடன் வழங்குநர் ஆகும்; CLSS மானியத்துக்கான தகுதி அடிப்படையைப் பூர்த்திசெய்யும் கடன் விண்ணப்பங்கள் தேசிய வீட்டுவசதி வங்கியின் (NHB) அங்கீகாரத்துக்காக அனுப்பப்படுகின்றன. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக ரூ 2.67 லட்சம்வரை* வட்டி மானியம் பெறலாம். மத்திய அரசு வழங்கும் வட்டி மானியமானது தகுதியுள்ள பலன்பெறுவோரின் கடன் கணக்கில் வரவுவைக்கப்படுகிறது. இதன் பொருள், பலன் பெறுவோர் ரூ. 20 லட்ச ரூபாயை 8.70% வட்டியில் 20 வருடக் கடனாகப் பெறும்போது, அந்தக் கடன் தொகையில் ரூ 2.67 லட்சம்* மானியமாகப் பெறுவார். இதனால், அவர் பெறும் வீட்டுக்கடனின் வட்டி விகிதம் 6.79%ஆகக் குறைகிறது.

நாடுமுழுவதும் பலன்பெறுவோர் இந்த மானியத்தைப் பெறுவதற்கு IIFL வீட்டுக்கடன்கள் உதவிவருகிறது.

கடன் இணைத்த மானியத் திட்டம் (CLSS):

ஒரு வீட்டின் ஆண்டு வருவாய் ரூ 6 லட்சத்துக்குள் இருந்தால், அந்த EWS மற்றும் LIG வீடுகள்/குடும்பங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் மானியத்துக்குத் தகுதிபெறும்; அந்தக் ‘குடும்பத்துக்கு’ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ஒரு ‘பக்கா’ வீடு இருக்கக்கூடாது. மானியமானது பலன்பெறுபவருடைய கடன் கணக்கில் முன்கூட்டியே வரவுவைக்கப்படுவதால், வீட்டுக்கடன், EMI ஆகியவை குறைகின்றன.

CLSS திட்டத்தின் அம்சங்கள்

  • அதிகபட்ச மானியம் ரூ. 2.67 லட்சம்*
  • 20 வருடங்கள் அல்லது கடன் காலகட்டம், இந்த இரண்டில் எது குறைவோ அதற்கு 6.5%* விகிதத்தில் வட்டி மானியம்
  • ரூ 6 லட்சம் வரையிலான கடன் தொகைகளுக்குமட்டுமே மானியம் கிடைக்கும்; ரூ 6 லட்சத்துக்குமேல் கூடுதல் கடன் தேவைப்பட்டால், மானியம் இல்லாத விகிதத்தில் அதனைப் பெறவேண்டியிருக்கும்
  • இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கக் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்கவேண்டும்.

Apply Link: http://pmaymis.gov.in/

This Video About : The Mission will be implemented during 2015-2022 and will provide central assistance to Urban Local Bodies (ULBs) and other implementing agencies through States/UTs for:
1. In-situ Rehabilitation of existing slum dwellers using land as a resource through private participation
2. Credit Linked Subsidy
3. Affordable Housing in Partnership
4. Subsidy for Beneficiary-led individual house construction/enhancement.

admin

Recent Posts

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

1 month ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 month ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 months ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

2 months ago