Video Link : https://youtu.be/m6Ltr9g4130
Video Link: https://youtu.be/FslxptAdIbY
மக்கள் தங்களுடைய கனவு இல்லத்தைப் பெறுவதற்கு உதவுவதற்காக, மாண்புமிகு பிரதமர் ஒரு முழுமையான, முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு நோக்கத்தை அறிவித்துள்ளார், 17 ஜூன் 2015ல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பெயர், ‘பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – எல்லாருக்கும் வீடு.’
பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் முக்கியமான உட்பிரிவுகளில் ஒன்று, குறைந்த வருவாய்க் குழு/பொருளாதாரரீதியில் பலவீனமான பிரிவு (EWS/LIG) மற்றும் நடுத்தர வருவாய்க் குழு (MIG – I & II) ஆகியவற்றுக்கான கடன் இணைத்த மானியத் திட்டம் (CLSS) இந்தத் திட்டத்தின்கீழ், கடன் வழங்கும் அமைப்புகளின்வழியாக மத்திய அரசு தகுதியுள்ள பலன்பெறுவோருக்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதி உதவி 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சட்ட உரிமை பெற்ற அனைத்து நகரங்கள், அவற்றின் அருகிலுள்ள திட்டப் பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலை அரசாங்கம் அவ்வப்போது மேம்படுத்திவரும்.
வட்டி மானியமானது இரண்டு மத்திய ஒருங்கிணைப்பு ஏஜென்ஸிக்களின் வழியே வழங்கப்படுகிறது – தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) மற்றும் வீட்டுவசதி & நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (HUDCO). முதன்மை அரசு அமைப்புகள், கடன்வழங்கும் அமைப்புகளுக்கு மானியத்தை வழங்குகின்றன, அவை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மானியம் பெற உதவுகின்றன.
IIFL வீட்டுக்கடன்கள் ஓர் அங்கீகாரம் பெற்ற கடன் வழங்குநர் ஆகும்; CLSS மானியத்துக்கான தகுதி அடிப்படையைப் பூர்த்திசெய்யும் கடன் விண்ணப்பங்கள் தேசிய வீட்டுவசதி வங்கியின் (NHB) அங்கீகாரத்துக்காக அனுப்பப்படுகின்றன. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக ரூ 2.67 லட்சம்வரை* வட்டி மானியம் பெறலாம். மத்திய அரசு வழங்கும் வட்டி மானியமானது தகுதியுள்ள பலன்பெறுவோரின் கடன் கணக்கில் வரவுவைக்கப்படுகிறது. இதன் பொருள், பலன் பெறுவோர் ரூ. 20 லட்ச ரூபாயை 8.70% வட்டியில் 20 வருடக் கடனாகப் பெறும்போது, அந்தக் கடன் தொகையில் ரூ 2.67 லட்சம்* மானியமாகப் பெறுவார். இதனால், அவர் பெறும் வீட்டுக்கடனின் வட்டி விகிதம் 6.79%ஆகக் குறைகிறது.
நாடுமுழுவதும் பலன்பெறுவோர் இந்த மானியத்தைப் பெறுவதற்கு IIFL வீட்டுக்கடன்கள் உதவிவருகிறது.
ஒரு வீட்டின் ஆண்டு வருவாய் ரூ 6 லட்சத்துக்குள் இருந்தால், அந்த EWS மற்றும் LIG வீடுகள்/குடும்பங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் மானியத்துக்குத் தகுதிபெறும்; அந்தக் ‘குடும்பத்துக்கு’ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ஒரு ‘பக்கா’ வீடு இருக்கக்கூடாது. மானியமானது பலன்பெறுபவருடைய கடன் கணக்கில் முன்கூட்டியே வரவுவைக்கப்படுவதால், வீட்டுக்கடன், EMI ஆகியவை குறைகின்றன.
Apply Link: http://pmaymis.gov.in/
This Video About : The Mission will be implemented during 2015-2022 and will provide central assistance to Urban Local Bodies (ULBs) and other implementing agencies through States/UTs for:
1. In-situ Rehabilitation of existing slum dwellers using land as a resource through private participation
2. Credit Linked Subsidy
3. Affordable Housing in Partnership
4. Subsidy for Beneficiary-led individual house construction/enhancement.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More