பெரம்பலூர் பகுதியில் குடிமராமத்து பணிகளுக்காக தோண்டிய போது அரிய வகை டைனோசர் முட்டைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே பல படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகே உள்ள ஏரியில் குடிமராமத்து பணிகளுக்காக அங்கிருந்தவர்கள் மண் எடுக்க குழி தோண்டியுள்ளனர். தோண்டி எடுத்து பார்க்கும் போது பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடல் வாழ் மீன் வகை உயிரினங்களின் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தை, ஆமை மற்றும் நட்சத்திர வகை மீன்களின் படிமங்கள் என்று கூறப்படுகிறது. பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த பகுதிகளில் இதுபோல் பல படிமங்களை சாத்தூரில் உள்ள புவியியல் ஆய்வாளர் எம்.எஸ்.கிருஷ்ணன் கண்டுபிடித்துள்ளார்.
அவர் படிமங்களுடன் ஒரு கல்மரத்தையும் கண்டுபிடித்துள்ளார். அந்த கல்மரம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பல கல்மர துண்டுகள் அந்த அப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த கல்மர துண்டுகள் கிரிட்டேஸியஸ் காலத்து மர வகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கல்மரங்கள் தமிழகத்தில் ஆலந்தூர் பகுதிகளில் மட்டும் தான் தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்மரங்கள், டைனோசர் முட்டைகள் மற்றும் படிமங்களை வைத்து பார்க்கையில் இந்த பகுதி கடல் பகுதியாக ஒருகாலத்தில் இருந்துள்ளது என்றும் தெரிகிறது.
இப்படியான இந்த அரிய பகுதியினை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க என்றும் தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக இந்த பகுதியினை அறிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More