பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பரிசுத் தொகை வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அரசு பொங்கலை முன்னிட்டு 2.கோடியே 15 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள், கரும்பு, என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 3ம் தேதி முதல் வழங்க உள்ளது. இதற்காக, 1,160 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள நியாயவிலைக்கடைகளில் இரு பணியாளர்களும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளில் 3 பணியாளர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் இதற்கென கட்டுப்பாட்டு அறை அமைத்து, அங்குத் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமித்துப் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வழங்குவதைக் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கலுக்கு ரொக்கத்தொகை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More