வேலை தேடுவோரையும் வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வேலை தேடுவோர் தங்களைப் பற்றிய தகவல்களைக் கட்டணமின்றி www.ncs.gov.in இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். வேலை கொடுக்கும் நிறுவனங்களும் இதில் இடம்பெறும். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்கள் நாடு முழுவதும் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்குச் சென்று இந்தத் தளத்தில் பதிவுசெய்துகொள்ள முடியும்.
வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் இடங்கள், போட்டித் தேர்வுகள் பற்றிய தகவல்களையும் இந்த இணையதளத்தில் பெறமுடியும். இதில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளனர். 6,550 நிறுவனங்கள் 3,77,493 பேருக்கு வேலை தரத் தயாராக உள்ளன. தமிழகத்தில் மட்டும் 48,797 அரசு வேலைகள் உள்ளன. வேலையில்லாதவர்கள் பதிவு செய்து பயன்பெறலாம். தொடர்புக்கு : www.ncs.gov.in
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More