Advertisement
Categories: Uncategorized

மெகா அறிவிப்பு.! அரசு கல்லூரிகளில் 4,000 பேராசிரியர் பணியிடங்கள்.! தமிழக அரசு அரசாணை .

Notification link

Notification link

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்; 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்து தேர்வு மற்றும் பணி அனுபவத்திற்கும், மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

எழுத்துத்தேர்வில் 200 மதிப்பெண்களும் பணி அனுபவத்திற்கு 30 மதிப்பெண்களும் என 230 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 7,918 உதவி விரிவுரையாளர் பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்பட உள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் அனுபவம் மதிப்பெண்கள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப ஓராண்டிற்கு இரண்டு மதிப்பெண்கள் விதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கும், தமிழ் மொழி பாடத் திறனுக்கான கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து தாள் இரண்டில் தொடர்புடைய பாடங்களுக்கான 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரத்திற்கு தேர்வு நடைபெறும். அதன் பின்னர் 30 மதிப்பெண்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 week ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

2 months ago