Advertisement

யாருக்கு கொரோனா எளிதாக தாக்கும்?.. ஆராய்ச்சி முடிவு!

கொரோனா தொற்றால் பாதிப்படைய இரத்த வகை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற உண்மையை 23 and Me என்ற மரபணு சோதனை நிறுவனம் சமீபத்திய ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.பாதிப்புக்கு உள்ளான 7.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருசிலர் மாத்திரம் ஏன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் குறைவான அறிகுறி உள்ளது? சிலர் ஏன் அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள்? இதற்கு விடை அந்த நபரின் குருதி வகையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இதன்படி ஓ குருதி வகையினை உடையவர்கள் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக உள்ளனர்.ஆனால் ஏ குருதி வகையினை உடையவர்களுக்கு கொரோனா தாக்கினால் கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன் உயிருக்கும் ஆபத்து நேரிடலாமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதேவேளை சீன, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago