Advertisement
Categories: Uncategorized

ரூ.15,000 வரை கடன் வழங்கும் கூகுள் பே..! எளிதாக பெறுவது எப்படி?

கூகுள் பே நிறுவனம் பயனர்களுக்கு தேவைப்படும் சிறிய அளவிலான தொகையை கடனாக வழங்கும் புதிய வழிமுறையை தொடங்கியுள்ளது.

கடன் உதவி வழங்கும் கூகுள் பே

என்ன தான் சம்பாதித்தாலும் நம்மில் பலருக்கு மாத இறுதியில் அல்லது திடீரென ஏற்படும் அவசர தேவைகளுக்கு பணம் தேவைப்படும் போது தெரிந்த நபர்களிடமோ அல்லது ஆன்லைன் லோன் நிறுவனங்களிடமோ நாம் பணத்தை கடனாக பெறுகிறோம்.

ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகள் மற்றும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டி இருக்கும். இந்நிலையில் நமது தினசரி வாழ்வில் பயன்படுத்தும் பணப் பரிவர்த்தனை செயலியான கூகுள் பே-யில்  நமக்கு தேவையான சிறிய அளவிலான தொகையை கடனாக வழங்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண மக்களுக்கு தங்கள் வாழ்வில் திடீரென ஏற்படும் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக டிஜிட்டல் கடன் திட்டத்தை கூகுள் பே(Google Pay) நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு கூகுள் பே நிறுவனம் சாஷட் லோன் என பெயர் வைத்துள்ளது, இதன் மூலம் சிறிய தொழில் செய்யும் வர்த்தர்கள் ரூபாய் 15,000 வரை கடன் உதவி பெற முடியும்.

இவ்வாறு பெற்ற கடனை 7 நாள் முதல் 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். சிறிய அளவில் வழங்கப்படும் இந்த கடன் உதவிக்கு கூகுள் பே குறிப்பிட்ட சில விவரங்களை மட்டும் பெற்றுக் கொண்டு கடனுக்கான உடனடி அப்ரூவல் வழங்குகிறது.

இதற்காக கூகுள் பே நிறுவனம் ஃபெடரெல் வங்கி, கோடக் வங்கி, மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சோதனை முயற்சியாக தற்போது இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே இந்த கடன் திட்டத்தை கூகுள் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடன் பெறுவது எப்படி?

வர்த்தகத்திற்கான கூகுள் பே ஆப்பை ஓபன் செய்து, அதில் லோன் பிரிவில் இருக்கும் ஆஃபர்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களுக்கு தேவையான கடன் தொகையை குறிப்பிட்டு, பின்வரும் எளிய நடைமுறையிலான விவரங்களை நிரப்பினால் கடன் உடனடியாக வழங்கப்படும். 

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago