அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தமிழக அரசு கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பாக 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு அத்துடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கியது.கடந்த 2019 பாராளுமன்ற பொது தேர்தல் நெருக்கத்தில் கூட இவ்வாறு வழங்கினர். பணம் தருவதற்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன. ஆனாலும் ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால் அவை ஓட்டாக மாறவில்லை. அத்தேர்தலில் அதிமுக கூட்டணி தான் மெகா வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பரிசு தொகுப்பு உடன் சேர்த்து புயல் நிவாரணம் என்ற பெயரில் ரூ. 2,000 வழங்கலாமா என்று ஆலோசிக்கின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அரசுக்கு ரூ.4000 கோடி கூடுதல் செலவாகும்.
புதுடெல்லி.: நாடு முழுவதும் உள்ள காப்பங்களில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி மற்றும் உள்கட்டமைப்புகளை உடனடியாக விரைந்து உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்தது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அடுத்த 30 நாட்களுக்கு தேவையான அதாவது ஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம், உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
அதேப்போன்று பல்வேறு குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் அவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.
இதில் நிதி பிரச்சனையால் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பபடுவதில்லை என்று உறுதியானால் மாநில அரசுகள் அதற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இதுபோன்ற குழந்தைகளின் குடும்பத்திற்கு என தலா ரூ.2000க்கான தொகையை அனைத்து மாநில அரசுகளும் ஒதுக்கீடு செய்து உதவிட முன்வர வேண்டும். ஒருவேலை அதற்கான நிதி தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். இதையடுத்து அவர்களது தரப்பில் ஒரு தனி பிரதிநிதியை நியமித்து மாநில அரசுகளின் கோரிக்கையை பரிசீலனை செய்து நிதி ஒதுக்கீட வேண்டும் என உத்தரவிட்டனர்.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More