Advertisement

ரேஷன் கார்டு இருந்தால் ரூ.50 ஆயிரம் கடன்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்தார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சிறு, குறு தொழில்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயக் கடன்களை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எனவும் அவர் உறுதியளித்தார்.

ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதோடு விவசாயம், சிறு கடைகள், கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும் அவர் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, குடும்ப அட்டை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடையே பேசுகையில், ”தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதோடு பல்வேறு நலவாரியத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரையில் உதவித் தொகை வழங்கியுள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம். ரேஷன் கார்டு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்.

admin

Recent Posts

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

3 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

4 weeks ago

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அதிரடி

Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More

1 month ago

முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம்’ – பயனாளிகள் தேர்வுக்கு வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More

1 month ago