நம் வீடுகளில் பயன்படுத்தும் கழிவறைக்கும் விமானங்களில் பயன்படுத்தப்படும் கழிவறைக்கும் என்ன வித்தியாசம் என்று உங்களுக்கு தெரியுமா..? இதுபற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்..
வீட்டின் கழிவறைகளில் இருக்கும் தன்ணீருடன் கூடிய பவுல், கழிவுகளை செப்டிங் டேங்குக்கு கொண்டு செல்லும்.. இதனால் தான் நாம் பிளஷ் செய்தவுன் கழிவுகள் அகற்றப்படுகிறது.
ஆனால் விமானங்களை பொறுத்த வரை, வெற்றுக் கழிவறைகளையே பயன்படுத்தப்படுகிறது. அதாவது அதில் பவுல் ஏதும் இருக்காது.. எனில், கழிவுகள் எப்படி அகற்றப்படுகிறது தெரியுமா..?
வெற்றிடக் கழிவறையிக் பொருத்தப்பட்டிருக்கும், வடிகுழாய் மூலம் கழிவுகள் வெளியேறுகின்றன. தண்ணீரை பளஷ் செய்தவுடன், அந்தக் குழாயின் வால்வுகள் திறக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்படுகின்றன. அதே போல், வீட்டின் கழிவறைகளுக்கு விமானக் கழிவறைகளுக்கும் மற்றொரு வித்தியாசமும் இருக்கிறது. அதாவது, விமானங்களில் உள்ள வெற்று கழிவறை குறைவான நீரையே எடுத்துக் கொள்கிறது. வெறும் 2 லட்டர் தண்ணீர் மட்டும் செலவாகிறது..
இந்த கழிவுகள் விமானத்தில் உள்ள கழிவுத் தொட்டிக்கு செல்கின்றன. கழிவுத் தொட்டியின் உள்ளே வெற்றிடம், கழிவு மற்றும் துர்நாற்றம் அனைத்தையும் உறிஞ்சுகிறது. இந்த தொட்டிகள் 64 லிட்டர் வரை இருக்கக்கூடும்.
கழிவுகள் இருக்கும் தொட்டியின் வெளிப்புறத்தில் ஒரு தாழ்ப்பாளை மட்டுமே வைத்திருப்பதால், தற்செயலாக உள்ளே இருந்து திறக்க முடியாது. அதற்கு பதிலாக, விமானம், தரையிறங்கும் வரை விமானம் கழிவறைகளின் கழிவுகளை சேமிக்கிறது.
விமான நிலையத்தில், அனைத்து கழிவுகளும் “தரைப்படை ஊழியர்களால் தரையிறக்கப்பட்டவுடன் அகற்றப்படுகின்றன. பின்னர் விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதற்கு அது வண்டியில் கொண்டு செல்லப்படுகிறது.
நவீன விமான வெற்றிட கழிப்பறைகளை ஜேம்ஸ் கெம்பர் வடிவமைத்து 1970 களில் காப்புரிமை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More