தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை டாஃபே நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில்,தமிழக அரசு மற்றும் டாஃபே நிறுவனத்தின் ஜெ பார்ம் ஆகியவை இணைந்து,சிறு மற்றும் குறு விவசாயிகள்,தங்களது அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 90 நாட்களுக்கு,மாஸே பர்குசன் மற்றும் எய்ச்சர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி வழங்க உள்ளது.
இதுகுறித்து,டாஃபே நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் கூறுகையில்,”தமிழக அரசின் ஊக்கமும் ஆதரவும் கொண்டு,தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவசமாக வாடகை சேவைகளை வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.இந்த முக்கியமான நேரம் மற்றும் முக்கியமான பயிர் பருவத்தின் மூலம் 2 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான உரிமையாளர்களைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு “இலவசமாக” வாடகை அடிப்படையில் 16,500 மாஸ்ஸி பெர்குசன் மற்றும் எய்ச்சர் டிராக்டர்களை,26,800 பண்ணை கருவிகளுடன் வழங்க உள்ளோம்.
இதனால்,இந்த திட்டமானது,மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சுமார் 50,000 விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
அதன்படி,தமிழக அரசின் உழவன் செயலி(App) அல்லது கட்டணமில்லா ஹெல்ப்லைன் 1800-4200-100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள்,டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கலாம்.
அதுமட்டுமல்லாமல்,முதல்வர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் உழவர் நலனில் ஆதரவு அளித்ததற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ,மேலும்,கொரோனா நிவாரணத்திற்காக,டாஃபே நிறுவனம் இதுவரை ரூ.15 கோடி பங்களிப்பு செய்துள்ளது”,என்று கூறினார்.
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More