Chennai District Collector Office Recruitment 2020: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு (UYEGP) உருவாக்கும் திட்டம்
வேலையற்ற இளைஞர்களுக்கானவேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP 2010-2011 ஆம் நிதியாண்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினால் கடந்த 10 ஆண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்திற்கு 2020-21 ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற 285 பயனாளிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிக பட்ச ரூ.10 இலட்சமும் சேவை தொழில்களுக்கு ரூ.5 இலட்சமும் வியாபாரத்திற்கு ரூ.5 இலட்சமும் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவர்களின் கல்வி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000/- க்கு மிகைப்படாமல் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினர் திருநங்கைகர்கள் சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின வகுப்பினர்) 45 வயத்துக்குள்ளும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.1,25,000/-ம் வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான உற்பத்தி சேவை மற்றும் விற்பனை தொழில்கள் செய்ய விண்ணப்பிக்க சென்னை மாவட்டத்தில் வசிக்கும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற விரும்பும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் சென்னை மாவட்டம் கிண்டி தொழிற் பேட்டையில் அமைந்துள்ள மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 004-22501621/22, 9788877322 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு விவரங்கள் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More
The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More