Advertisement

100ள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க தமிழக அரசு ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

100ள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க தமிழக அரசு ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் பணியாற்றிய 26.84 லட்சம் பேருக்கு 2 நாள் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 22 ந்தேதியில் இருந்து நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

யாரும் வீட்டை விட்டு, அல்லது தங்கும் இடங்களில் இருந்து வெளியே வரவேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மூடிக்கிடக்கின்றன. போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் ஏராளமான பணியாளர்கள் ஊதியம் இன்றியும், வேலையை இழந்தும் தவித்து வருகின்றனர்.

பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கவில்லை என்றும், நடப்பு மாதத்துக்கு ஊதியம் தொடர்பான எந்த பதிலும் இல்லாத நிலையில் இலட்சக்கணக்கானோர் எதிர்காலம் கேள்விக்குரியதாக இருக்கிறது. இதில் 100 நாட்கள் வேலை பார்க்கும் பணியாளர்களும் அடங்குவர். ஊரடங்கு அமலில் இருப்பதால், நூறு நாள் வேலைத்திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு முடிந்தவுடன், பணிகளை தொடங்குவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க தமிழக அரசு ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 2 நாட்களுக்கான ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் வேலைபார்த்த 26 லட்சத்து 84 ஆயிரத்து 989 பேருக்கு இரண்டு நாள் ஊதியம் சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக 123 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம், ஆனால் முகக் கவசம் அணிவதும் சமூக விலகளை கடைபிடிப்பதும் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

SBI-ல் கணக்கு இருக்கா? ATM கார்டும் உங்ககிட்ட இருக்கா? ரூ. 450 வரை பிடிப்பு.. உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க..

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More

2 days ago

மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சம் 2025: தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன்

தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More

4 days ago

நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துபவரா?.. பிப். 1ம் தேதி முதல் பணம் செலுத்த முடியாது.. RBI முக்கிய முடிவு!

UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More

5 days ago

மாதம் ரூ.210 கட்டினால்.. ரூ.10000 விடாமல் வரும்.. அருமையான பென்ஷன் திட்டம்.. சூப்பர் ஸ்பெஷாலிட்டீஸ

சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More

1 week ago

வெறும் ரூ.2000 முதலீடு செய்யுங்க.. ரூ.11,16,815 ரிட்டன்ஸ்! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம வசதி…

சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More

1 week ago

RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!

Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More

2 weeks ago