பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்காக குறைந்த செலவில் காப்பீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக மத்திய அரசு சில காப்பீட்டு திட்டங்களை ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு விபத்துக்கான காப்பீடும், விபத்தினால் ஏற்படும் உடல் ஊனத்திற்கும்
காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 மட்டும் பிரீமியத் தொகையாக செலுத்தினால் போதும். 2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மூன்று முக்கிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று.
இத்திட்டத்திற்கு 18 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களிடம் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆட்டோ-டெபிட் வசதிக்கான ஒப்புதலை தர வேண்டும். எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களால் இந்தக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது. மற்ற சில பொது காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளுடன் கூட்டணி அமைத்து இத்திட்டத்தை வழங்குகின்றன.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை பொறுத்தவரையில், ஆதார் அட்டை மட்டுமே போதுமானது. மற்ற காப்பீட்டுத் திட்டங்களை பயன்படுத்தினாலும், கூடுதலாக இத்திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்தின் பயன்களை பொறுத்தவரையில், விபத்தால் உயிரிழந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தால் முழுமையாக ஊனமடைந்தாலும் ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தால் பாதி ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
விபத்தால் ஏற்படும் பிரச்சினைகள் மட்டுமே இத்திட்டத்தில் அடங்கும். இயற்கை மரணம், தற்கொலை உள்ளிட்டவற்றுக்கு இத்திட்டம் பொருந்தாது. இந்த காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேறும் நபர்கள் சில வருடங்களில் மீண்டும் இணைந்துகொள்ளலாம். எனினும், முந்தைய ஆண்டுகளுக்கான வருடாந்தர பிரீமியத் தொகையை செலுத்த வேண்டும். இதற்கான நிபந்தனைகளும் காப்பீட்டு நிறுவனத்தால் விதிக்கப்படும்.
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More