கொல்கத்தா : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள தன்னுடைய வீட்டில் தன்னுடைய நேரத்தை பயனுள்ளதாக செலவழித்து வருகிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி
இந்நிலையில் தன்னுடைய வீட்டில் சாய்ந்த மாமரத்தை மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அதிக வலிமை தேவைப்பட்டதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த டிவீட்டுக்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், மற்றொரு பால்கனி, மற்றொரு வலிமையான செயல் என்று கமெண்ட் செய்துள்ளார்.
கடந்த 2002 ஜூலை 13ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் இருவரும் இணைந்து அதிரடி காட்டி, இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.
அப்போது, இந்த செயல் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது. சமீபத்தில்கூட இந்த வீடியோவை தன்னுடைய மகள், பார்க்கும்போது தனக்கு சங்கடமாக உள்ளதாக கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ள கங்குலி, வீட்டில் சாய்ந்த மாமரத்தை பால்கனியில் இருந்துக்கொண்டு, மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதிகமாக வலிமை தேவைப்பட்டதாகவும் டிவீட் செய்துள்ளார்.
இந்த டிவீட்டிற்கு வழக்கம் போல ஏராளமான ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அளித்திருந்தனர்.
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More