Advertisement

2068 பூமியை தாக்க இருக்கும் சிறிய கோள்: மனித குலத்தையே அழிக்கும் என்று விஞ்ஞானிகள் தகவல்

ஒரு பொருளுக்கு எகிப்திய கடவுளான கேயாஸ் மற்றும் ஈவில் பெயரிடப்பட்டால், அது அச்சுறுத்தும் தோற்றம் அல்லது தீங்கிழைக்கும் முனைகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் பிந்தைய கேயாஸ் கடவுளுக்குப் பிறகு ஒரு சிறிய கோள் ஒன்று அப்போபிஸ் -99942 என பெயரிடப்பட்டுள்ளது. இது நம் கிரகத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்றும் 2068-க்குள் பூமியை மோதகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அப்படியானால் அபோகாலிப்டிக் கணிப்பு ஒரு தீர்க்கதரிசனம் மூலமோ அல்லது எந்த அறிவியல் புனைகதை மூலமோ மேற்கொள்ளப்படவில்லை. அது உண்மையான அறிவியல். சிறுகோள் 400 மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாசா இதை ஒரு ‘பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்’ என்று வகைப்படுத்தியுள்ளது. கடந்த 2012ல் உலகம் அழியப்போகிறது என்ற கூற்றுக்கள் மாயன் காலெண்டர்கள் தொடர்பான தவறான தகவல்களால் தூண்டப்பட்டிருந்தாலும், இந்த தகவலை விஞ்ஞானிகளும் ஆதரித்தனர்.

இருப்பினும், விஞ்ஞானம் தொடர்பான கணிப்புகளும் துல்லியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. கடந்த 2004ம் ஆண்டில் டேவிட் ஜே. தோலென் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட அதே சிறுகோள் சில வட்டங்களில் சற்று எச்சரிக்கையை ஏற்படுத்தியது. பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சுபாரு தொலைநோக்கியின் உதவியுடன், 2029-க்குள் அந்த கோள் பூமியை தாக்கும் என்று வானியலாளர்கள் கூறினர். அந்த சிறுகோள் யார்கோவ்ஸ்கி ஆக்ஸலரேஷன் என்று அழைக்கப்படும் வழியாக சென்றது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சூரிய ஒளியால் வான் நகரும் உடல்கள் மீது செயல்படும் ஒரு சிறிய சக்தி. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சூரிய ஒளி என்பது நம்மால் உணர முடியாத சக்தி, இது மாபெரும் கற்பாறையை நமது கிரகத்தை நோக்கித் தள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் 2029 ஆண்டு பூமியை நெருங்கும் கோளானது மோதலில் முடிவடையாவிட்டாலும், பூமியை இன்னும் மிக நெருக்கமாக கடந்து செல்லும் என கணிக்கபட்டுள்ளது.

முன்னதாக, மோதலுக்கான வாய்ப்புகள் 2.7% நிகழ்தகவு என மதிப்பிடப்பட்டது. அவை 2029ல் பறக்கும்போது பூமியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு காட்சியாக இருக்கும் என்றும் அவற்றால் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டது. நாசாவின் கூற்றுப்படி, இது அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து அமெரிக்காவையும் கடக்கும் எனக் கூறியுள்ளது. ஆனால் 2017 தரவும் மற்ற அனைத்து காரணிகளும் 2068 ஆம் ஆண்டில் 150 இல் 1 பங்கு என்ற இடத்தில் சிறுகோள் மோதலுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய கணிப்புகளை விட இது மிகவும் துல்லியமானதாக கருதப்படுகிறது.ஏனெனில் அதிக நேரம், தரவு மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை கொண்டு அதன் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கணிப்பு தேதி அல்லது தூரம் அல்லது சக்தியை மதிப்பிடுவதில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கும். ஆனால் எந்த பிழையும் இல்லாமல் மற்றும் தரவு துல்லியமாக இருந்தால், அப்போபிஸ் வெறுமனே பூமியின் மேல் பறப்பதை விட அதிகமான சேதத்தை ஏற்படுத்தும் என உறுதியாகக் கூறலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இது உண்மையில் 2068ம் ஆண்டு 1 இல் 150 என்ற விகிதத்தில் மோதக்கூடும் என அதிர்ச்சியளித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

admin

Recent Posts

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

14 hours ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

18 hours ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

3 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

3 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago