நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் காலியாக 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறனும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுக்கான இந்த வாய்ப்பை மிஸ்பண்ணிடாமல் பயன்படுத்தி பயன்பெறவும்.
பணி: Post Graduate Teacher (PGT), Trained Graduate Teachers (TGT), Primary Teacher (PRT)
காலியிடங்கள்: 8000
தகுதி: PGT பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.
TGT, PRT பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.
மேலும் மேற்கண்ட தகுதியுடன் CET, TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CET, TET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 5 ஆண்டுக்கும் குறைவான பணி அனுபவம் உள்ளவர்கள் 40க்குள்ளும், 5 ஆண்டுக்கும் மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வானது நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வரும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.aps-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்விற்கான அனுமதிசீட்டு 04.11.2020 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்
தேர்வு முடிவுகள் 02.12.2020 அன்று வெளியிடப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aps-csb.in என்ற இணையதளத்தில்அல்லது http://aps-csb.in/Candidate/GeneralInstructions.aspx என்ற லிங்கில் சென்று பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More