இலங்கை-நியூசிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், டெஸ்ட் தரவரிசையில் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவலில் நடைபெறுகிறது.
இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான டெஸ்டில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ரன்களும், நியூசிலாந்து 373 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 302 ரன்களும் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆட்டத்தின் கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 285 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி இந்த போட்டியில் தோல்வியுற்றதால், டெஸ்ட் தரவரிசையில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா வரும் ஜூன் 7 ஆம் தேதி மோதுகிறது.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More