Advertisement

SBI BANK புதிய அறிவிப்பு: 45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் கடன்… எப்படி வாங்குவது?

ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்கும் அவசரக் கால கடன் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

கொரோனா பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இக்காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைக்கே நிதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். சேமிப்புப் பணத்தை எடுத்துப் பார்த்துப் பார்த்துச் செலவிட்டு வருகின்றனர். அரசு தரப்பில் பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாகத் தெரியவில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாட்டு மக்களுக்கு சிறப்புக் கடன் சலுகைத் திட்டம் ஒன்றை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

மக்களின் அவசரக் கால பணத் தேவையைக் கருத்தில் கொண்டு, SBI Emergency Loan Scheme என்ற கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வெறும் 45 நிமிடங்களில் ரூ.5 லட்சம் வரையில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இக்கடனுக்கான மாதத் தவணையை ஆறு மாதங்கள் கழித்துச் செலுத்தத் தொடங்கலாம் என்று சலுகையை எஸ்பிஐ வங்கி அளித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடி இருக்கும் சமயத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எஸ்பிஐ வழங்கும் இந்த அவசர காலக் கடன் திட்டத்துக்கான வட்டி விகிதம் 10.5 சதவீதமாகும். இது மற்ற தனிநபர் கடன்களை விடவும் வட்டி குறைவுதான். இக்கடன் வசதியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் (YONO App) மூலமாகவும் விண்ணப்பம் செய்து பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்துகொண்டே வெறும் 45 நிமிடங்களில் இந்தக் கடனைப் பெற முடியும். இக்கடனைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்குத் தகுதி உள்ளதா என்பதைக் கண்டறிய, அவர்களது மொபைல் எண்ணில் இருந்து ’567676’ என்ற எண்ணுக்கு PAPL என்று டைப் செய்து, எஸ்பிஐ வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

எஸ்பிஐ வங்கியின் இந்த அவசரக் காலக் கடனைப் பெறுவதற்கு YONO App மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட்போனில் YONO

SBI App பதிவிறக்கவும் செய்து, அதில் Pre-approved Loan என்ற வசதியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் எவ்வளவு கடன் தேவை, அதனை எவ்வளவு காலத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்பிஐ வங்கியிடமிருந்து OTP எண் வரும். அதைப் பதிவு செய்த பின்னர் தேர்வு செய்யப்பட்ட கடன் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

admin

Recent Posts

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More

1 day ago

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

1 month ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

1 month ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 month ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 month ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

1 month ago