தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கு மேல் அரசு காலிப் பணியிடங்கள் உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய அவர், தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேல் அரசு காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எவ்வாறு நடத்துவது, தேர்வுக்கான பயிற்சி எவ்வாறு வழங்குவது தேர்வு முறையில் உள்ள குளறுபடிகளை எவ்வாறு சரி செய்வது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய தனி நிபுனர் குழு தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேல் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நிபுணர் குழு அதற்கான ஆய்வினை தற்போது செய்து வருகிறது இந்த குழு 6மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு தேர்வு முறை மற்றும் அரசு வேலைவாய்ப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டுகளில் அரசு பணிக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது டி.என்.பி.எஸ்.சி மற்றும் அரசு பணிக்கு படிக்கும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More