Advertisement
Categories: Uncategorized

விஸ்வகர்மா யோஜனா திட்டம்’ – யாருக்கு பயன்படுகிறது | Vishwakarma Scheme | PM Modi | Tamil News

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்: விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும்  கைவினைஞர்கள் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய  திட்டமாக  சமீபத்தில் பிரதமர் மோடி தன் சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்,

திட்டத்தின் படி பாரம்பரிய திறன்கள் மற்றும் கைவினைஞர்களை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில்  அமைந்துள்ளதால் மத்திய அமைச்சரவை இதற்கு விரைவாக ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவை தொழிலாளர்கள் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள், பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரை மானிய கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார். இதன் மூலம் கைவினைஞர்ககளுக்கு முதல் தவணையாக ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டரை லட்சம் மானியத்துடன் கூடிய கடனாக 5% வட்டி விகிதத்தில் வழங்கப்படும். இந்த திட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி அன்று ரூபாய் 13,000 கோடி நிதி செலவில் தொடங்கப்பட இருக்கின்றது.

திட்டத்தின் நோக்கம்

விஸ்வகர்மா போஜன திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்கு முன்முயற்சி. இது பாரம்பரிய கைவினை மற்றும் திறன்களில் ஈடுபட்டுள்ள தனி நபர்களுக்கு நிதி உதவியை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது. திட்ட மூலம் கைவினைஞர்களுக்கு வலுவான ஆதரவு அமைப்பை வழங்க முற்படுகிறது. மேலும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பத்தை பாதுகாப்பதற்கு இது பங்களிக்கிறது.

நிதி உதவி

விஸ்வகர்மா போஜனா திட்டத்தின் கீழ் 13000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதால் ரூபாய் 2 லட்சம் வரை மானிய கடன்களை வழங்குகிறது. இது அவர்களது கலைத் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் நிதி கட்டுப்பாட்டுகளை குறைக்கும். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஆரம்பத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் ரூபாய் ஒரு லட்சம் வரை கடன்களை வழங்குகிறது. இது ஐந்து சதவீதம் வட்டியை வசூலிக்க உள்ளது. இந்த நடைமுறையில்  மற்ற விகிதங்களை காட்டிலும் இதன் வட்டி விகிதம் கணிசமாக உள்ளது. இதனால்  அதிக வட்டி சுமை இன்றி அணுக முடியும். அடுத்த கட்டத்தில் இரண்டு லட்சம் வரை கடன்  உதவி வழங்கும். மேலும் 5% வட்டி வட்டி விகிதம் தொடரும்.

 ஊக்கத்தொகை

உதவித்தொகை வழங்குவது மற்றும் ஒரு சிந்தனை அணுகுமுறையை இத்திட்டம் உள்ளடக்கியது. இதில் கைவினைஞர்கள் ரூபாய் 500 உதவி தொகையை பெறுவார்கள். இதனால் அவர்கள் நிதி கவலை இன்றி திறன் மேம்பாட்டை தொடர முடியும். மேலும் கூடுதலாக நவீன கருவிகளை வாங்குவதற்கு வசதியாக அதிக திறன் மற்றும் துல்லியத்துடன் பணிபுரியும் வகையில் ரூபாய் 1500 வழங்கப்பட உள்ளது.

பதிவு செய்முறை

இத்திட்டத்திற்கு எளிதாக பதிவு செய்ய பொதுமக்கள் கிராமங்களில் உள்ள பொது இ சேவை மையங்களில் அணுக அரசாங்கம் பதிவு புள்ளிகளாக நியமித்துள்ளது. இந்த பயனர் நட்பு அணுகுமுறை நாட்டின் பல்வேறு மூலையில் உள்ள கைவினைஞர்கள் தடையின்றி இந்த மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Official Website Link:

Website Link

admin

Recent Posts

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

19 hours ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

2 weeks ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 weeks ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

4 weeks ago