Advertisement

அதிர்ச்சி! கருணாநிதியின் மரணம் குறித்து விசாரணை செய்யப்படும்.. அதிமுக எம்.எல்.ஏ. பரபரப்பு!

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், அஇஅதிமுக மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தெளிவாக கூறிவிட்டார்.

கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாத போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தவறான ஆலோசனை கூறிய ஸ்டாலின், தனது சுயலாபத்திற்காக அவரை தேர்தலில் நிற்க வைத்துள்ளார்.

எனவே, கருணாநிதியின் மரணத்திற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்று அவரே வெளிப்படையாக கூறியுள்ளார் என தெரிவித்தார்.

தொடர்ந்து, “2021ல் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார் மேலும், திமுகவில் சீட் கிடைக்காதவர்கள் எல்லாரும் மு.க.அழகிரி பக்கம் வந்து விடுவார்கள் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

4 weeks ago