அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், அஇஅதிமுக மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தெளிவாக கூறிவிட்டார்.
கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாத போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தவறான ஆலோசனை கூறிய ஸ்டாலின், தனது சுயலாபத்திற்காக அவரை தேர்தலில் நிற்க வைத்துள்ளார்.
எனவே, கருணாநிதியின் மரணத்திற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்று அவரே வெளிப்படையாக கூறியுள்ளார் என தெரிவித்தார்.
தொடர்ந்து, “2021ல் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார் மேலும், திமுகவில் சீட் கிடைக்காதவர்கள் எல்லாரும் மு.க.அழகிரி பக்கம் வந்து விடுவார்கள் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More