இன்றைய காலக்கட்டத்தில் தனிநபர் கடன் பலருக்கும் உதவிக்கரமாக இருக்கிறது. அவசர காலங்களிலும், திடீர் செலவுகளை சமாளிக்கவும் இந்த கடன் மிகவும் பயனாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி தனிநபர் கடன் பெறுவது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
அவசர காலங்களில் தனி நபர்கள், தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. அத்துடன் அரசும் பல்வேறு விதமான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தனிநபர் கடன் என்பது அவசரமான சூழல், திடீர் செலவுகளை சமாளிக்க உதவுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி கடன் பெறுவது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

தனிநபர் கடனில் குறைந்த தொகையினை கூட கடனாக பெறலாம். அத்துடன் குறுகிய காலத்தில் கடனை திரும்ப செலுத்துவது மற்றும் உடனடியாக பணம் கிடைக்கும் வசதி ஆகியவை தனிநபர் கடனில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு வசதிகள் இருப்பதால் தனிநபர் கடனை பலரும் வாங்குகின்றனர். பொதுவாகவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் என எங்கு கடன் வாங்கினாலும், அதற்கு சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை மூலமாக கடன் பெறுவது என்பது மற்ற வகையில் கடன் பெறுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. வருமானச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று போன்ற அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ஆதார் அட்டை கடன்கள் எளிமையானவை. மேலும், பேப்பர் வேலைகளும் இதில் கிடையாது. இதனால் அலையவும் தேவையில்லை.
அவ்வாறு இருக்கும் போது தான் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும். செயல்பாட்டில் இருக்கும் ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு தான் கடனுக்கு விண்ணப்பிக்கும் முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
