Advertisement
Categories: Uncategorized

இனி ஒருவரே பல கடன்களை வாங்க முடியாது!’ – RBI-யின் புதிய செக்… விவரம் என்ன?

தேவைகள் இருக்கிறது…செலவுகள் இருக்கிறது’ என்று ஒருவரே பல தனிநபர் கடன்களை வாங்கும் நிலை அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி தனது உத்தரவால், இந்த நடைமுறைக்கு செக் வைத்துள்ளது.

இதுவரை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்களின் கடன் அறிக்கையை அதாவது கடன் தொகை, வட்டி, அவர்கள் எப்போது வட்டி கட்டுகிறார்கள்…வட்டி சரியாக கட்டுகிறார்களா போன்ற தகவல்களை மாதத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்து வந்தது.

இதை மாற்றி, ‘இனி கடன் அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட்’ செய்ய வேண்டும் என்று வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு நபர் ஒரு தனிநபர் கடனை வாங்கி சரியான தேதியில் வட்டி கட்டாமல் போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது கடன் தகவல்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தான் அப்டேட் செய்யப்படும் என்கிறபோது அந்த இடைவெளியில் அவர் வேறு சில கடன்களை கூட வாங்கலாம். அவற்றை கட்டாமல் போகவும் அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால், கடன் அறிக்கை 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படும்போது, அவரது கடன் அறிக்கையை பார்த்து பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கும். இதனால், கடன்கள் கட்டப்படாமல் போவதை தவிர்க்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த 15 நாள் உத்தரவால், ஒருவருக்கே பல தனிநபர் கடன்கள் கிடைப்பது இனி கொஞ்சம் சிக்கல் தான். அவரது கடன் அறிக்கை சரியாக இருந்தால் மட்டுமே, அவரால் பல கடன்களை வாங்க முடியும்.

admin

Recent Posts

NLM-EDP மூலம் கழுதை வளர்ப்பு ஊக்குவிக்கிறது

தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More

2 days ago

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராதாம்! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More

6 days ago

ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்

நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More

6 days ago

ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி

சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More

6 days ago

கோவை வருகிறார் பிரதமர் மோடி… பாஜக சார்பில் பூமிபூஜை!

கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More

1 week ago

இறப்புச் சான்றிதழ் எப்படி பதிவு செய்வது? Death certificate how to apply

தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More

2 weeks ago