Advertisement
Categories: Uncategorized

ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்

நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக இன்று நாகர்கோவில் வந்த மோடி, மாநில உரிமைக்காக போராடிய அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறார். ஒருபுறம் தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களக்கான உரிமைகளை பறித்துக்கொண்டு, மறுபுறம் மாநில உரிமைகளுக்காக போராடிய அண்ணாவுக்கு தலைவணங்குவது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கு ஆபத்து மத்திய அரசு தொகுதி மறுவரையறையை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அதுவும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில். இதற்கு முன்னரும் இப்படித்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர் காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, பின்னர் தொகுதி மறுவரையறையை அமல்படுத்த வேணடும் என்று சொல்லப்பட்டிருந்தது.

தொகுதி மறுவரையறை

ஆனால், 1971 மற்றும் 2001 என இரண்டு முறையும் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கும்போது, வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கவில்லை. எனவே, 25 ஆண்டுகள் டைம் கொடுக்கப்பட்டது. 2026ம் ஆண்டுடன் இந்த கெடு முடிவடையும் நிலையில் இப்போதும் மக்கள் தொகையை வட மாநிலங்கள் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.

Also Read உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்!

மக்கள் தொகை எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தாதவரை, பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை ஏற்காத மத்திய அரசு தொகுதி மறுவரையறையை அவசர கதியில் அமல்படுத முயன்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பலம் நாடாளுமன்றத்தில் குறையும்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்காக குரல் கொடுத்து வரும் இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவில் ரோடு ஷோ மேற்கொள்ள வந்திருக்கிறார்.

தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை?

மோடியின் செயல் முன்னதாக அவர், அண்ணா சிலைக்கு மலர்தூவி தலை வணங்கி மரியாதை செலுத்தியிருந்தார். இதுதான் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடிய அண்ணாவை வணங்கிக்கொண்டே, தொகுதி மறுவரையறை போன்ற தமிழ்நாட்டு விரோத நடவடிக்களை எப்படி மேற்கொள்ள முடிகிறது? என திமுவினர் கேள்வி எழுப்பியிருக்கறது.

admin

Recent Posts

214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More

9 hours ago

PMEGP / NEEDS SCHEME: தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன் || Tamil Nadu government subsidy loan 10L

PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More

2 days ago

Govt Scheme: TVK 4000 Rupees Scheme Eligibility வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

TVK 4000 Rupees Scheme Eligibility: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான… Read More

4 days ago

Tata launches 2026 Tiago EV with 4.69 Lakh BaaS entry price

Tata launches 2026 Tiago EV: The Indian car market is changing fast, moving towards green… Read More

1 week ago

Top Budget Friendly Best Electric Bike in India Picks

Best Electric Bike: The streets of our nation are changing fast. With fuel costs going… Read More

1 week ago

Earn mony on online 2026 best method you must try

Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More

2 weeks ago