Advertisement
Categories: Service

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராதாம்! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தென் மாநிலங்கள் அரசியல் அதிகாரத்தைப் பாதிக்கும் என்று கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதற்கிடையே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு என இரண்டையும் ஒரு சேரச் செய்ய முயல்கிறது. இதில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு கிடைக்கிறது. எந்தவொரு கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேநேரம் தொகுதி மறுசீரமைப்பிற்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விவாதம் மத்திய அரசின் இந்த அறிவிப்பு, இந்திய அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, “தொகுதிகள் அதிகரித்தால் தென் மாநிலங்களின் அதிகாரம் பறிபோகுமே?” என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இதற்கிடையே மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இது தொடர்பாக ஆங்கில இதழான ஹிந்துஸ்தான் டைமஸுக்கு பேட்டியளித்துள்ளார்.

அது தொடர்பாக நாம் பார்க்கலாம்! வார்த்தையே இல்லையே தொகுதி மறுசீரமைப்பு வரைவு மசோதாவில் ‘விகிதாச்சாரம்’ (Proportion) என்ற வார்த்தையே இல்லையே என்ற கேள்விக்கு அவர், “மசோதா தாக்கல் செய்யும்போது அது தெளிவாகக் குறிப்பிடப்படும்” என்று மட்டும் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கும் என்றும், இது அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் அமையும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். அதாவது, மொத்த இடங்கள் 850-ஆக அதிகரித்தாலும், மாநிலங்களுக்கு இடையேயான பவர் பேலன்ஸ் மாறாது என்பது தான் மத்திய அரசின் வாதம்.

தற்போதுள்ள 543 இடங்களை ஏன் திடீரென 850ஆக (சுமார் 50% உயர்வு) அதிகரிக்க வேண்டும்? அதற்கு எதாவது காரணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், “இதைப் பற்றி நாங்கள் ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளிடம் விளக்கியுள்ளோம். மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருப்பதால்தான் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்படுகிறது.

பெரிய சுமை இந்தியாவில் ஒரு எம்.பி சராசரியாக 25 முதல் 27 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.. இது கிட்டத்தட்ட ஒரு சிறிய நாட்டின் மக்கள் தொகைக்குச் சமம். இங்கிலாந்தில் 70,000 பேருக்கு ஒரு எம்.பி இருக்கும்போது, இந்தியாவில் 140 கோடி மக்களுக்கு வெறும் 543 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர்.

1971ல் தொகுதி மறுசீரமைப்பு நடந்தபோது மக்கள் தொகை 60 கோடிக்கும் குறைவு, இன்று 140 கோடிக்கும் அதிகம். இவ்வளவு பெரிய எண்ணிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எம்.பி-க்களுக்கு மிக பெரிய சுமையாகும்” என்றார். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும்போது ஏன் இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர் என்று எதிர்க்கட்சிகள் கேள்விக்கு ரிஜிஜு, “ஒவ்வொரு நாளும் இந்தச் சுமை அதிகமாகிறது. காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர மற்றவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கேரளா, அசாம் தேர்தலுக்கு முன்பே இதைச் செய்திருக்க முடியும்.. ஆனால் இப்போதுதான் சரியான நேரம்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

கேள்வி “850 சீட்கள்” என்பது வெறும் எண்ணிக்கை மாற்றம் மட்டுமல்ல.. அது இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்பையே மாற்றப்போகும் ஒரு திட்டம். மகளிருக்கு இடம் கொடுப்பதற்காக இடங்களை அதிகரிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், “விகிதாச்சாரம் மாறாது” என்று அமைச்சர் வாய்மொழியாகச் சொல்வது சட்டப்பூர்வமாக எப்படிச் செயல்படப்போகிறது என்பதுதான் தென் மாநிலங்களின் மில்லியன் டாலர் கேள்வி.

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

2 weeks ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

2 weeks ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

2 weeks ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

1 month ago