நிபுணர் குழு இன்று தனது பரிந்துரையை வழங்க இருக்கும் நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்த இந்த ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மக்கள் சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, 20-ந் தேதி (இன்று) முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி சில நிபந்தனைகளுடன் ஊரக பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம் என்றும், வேளாண்மை பணிகள் நடைபெறலாம் என்றும், கிராமப்புற பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தச்சு தொழிலாளர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், மோட்டார் பழுதுபார்ப்போர், கம்ப்யூட்டர் பழுது பார்ப்போர் இன்று முதல் தங்கள் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆனாலும் ஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறைகளை தளர்த்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், இந்த நடைமுறைகள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
கட்டுப்பாடுகள் நீடிக்கும்
மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் இன்று தங்களுடைய பணிகளை தொடங்கலாம் என்று ஆவலோடு காத்து இருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு விளக்கம் அளித்து இருக்கிறது. அதில், ஊரடங்கு குறித்து அரசின் உத்தரவு வரும் வரை, தமிழகத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று அறிவித்து உள்ளது. அதாவது தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு கடந்த 15-ந் தேதி வெளியிட்ட ஆணையின்படி ஏப்ரல் 20-ந் தேதிக்கு (இன்று) பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என தெரிவித்து இருந்தது. இதற்கென மாநில அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்து உள்ளது.
இந்த குழு தன் முதல் கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதல் கட்ட ஆலோசனைகளை (பரிந்துரைகள்) முதல்-அமைச்சரிடம் 20-ந் தேதி (இன்று) தெரிவிக்க உள்ளது.
இந்த குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதல்- அமைச்சர் முடிவெடுக்க உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இன்று அறிவிக்கிறார்
ஊரடங்கில் எந்தெந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்கிறார். அதைப்பொறுத்து எந்தெந்த தொழிற்சாலைகள், தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்பது தெரியவரும்.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More