கட்டுமானம்- ஆட்டோ தொழிலாளர்கள்ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்அதிகாரி தகவல்
கட்டுமானம்- ஆட்டோ தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஸ்ரீதர் கூறி உள்ளார்.
திருவாரூர்,
கட்டுமானம்- ஆட்டோ தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஸ்ரீதர் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவு பொருட்கள் தொகுப்பு
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு நிவாரணமாக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்துள்ள கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் அந்த 2 நலவாரியங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற 6,551 கட்டுமான தொழிலாளர்கள், 1,507 ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் 519 கட்டுமான தொழிலாளர் ஓய்வூதியதாரர்கள், 53 ஆட்டோ தொழிலாளர் ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய உணவு பொருட்கள் தொகுப்பை அந்தந்த ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவு அட்டை
நலவாரிய பதிவு அட்டை, ஸ்மார்ட் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வந்து ரேஷன் கடைகளில் பணியாளர்களிடம் காண்பித்து உணவு பொருட்கள் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More