மேலும் விவரங்களுக்கு: https://labour.tn.gov.in/
Website : www.tnuwwb.tn.gov.in
வள்ளியூர்:
ராதாபுரம் தொகுதியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரூ.4 லட்சம் நிதி உதவி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் இருந்து பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரிய வீட்டு வசதி திட்டத்தின் மூலம் வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்குகிறது.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பயன் பெற ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தில் செயல்படும் நெல்லை மாவட்ட டாக்டர் கலைஞர் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பதை பூர்த்தி செய்து, தேவைப்படும் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க…
வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 3 வருடங்கள் நிறைவு அடைந்திருக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பெயரில் குறைந்தபட்சம் 300 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பெயரில் பட்டா அல்லது அரசு வழங்கியுள்ள இலவச வீட்டுமனைப்பட்டா இருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கான எஸ்டிமேட் பொறியாளரின் கையொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினருக்கு அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான காங்கீரீட் வீடு இருக்கக்கூடாது. இதற்குட்பட்டவர்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை, நல வாரிய அடையாளஅட்டை, நல வாரிய உறுப்பினரின் ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, நடப்பாண்டின் வருமானச்சான்று மற்றும் நலவாரிய உறுப்பினரின் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தின் மூலம் கட்டுமானம், ஆட்டோ மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இலவசமாக நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை பதிவு செய்தல், புதுப்பித்தல், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகளை பெற நேரில் வந்து பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
construction workers-கட்டுமான தொழிலாளர்கள்
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More