Advertisement
Categories: Poltics 2026

திமுகவுக்கு ‘குட்பை’.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடும் நிலையில் பிடி செல்வக்குமார் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். திமுகவில் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சட்டசபை தேர்தலில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான், விஜயிடம் மேனேஜராக பணியாற்றியவர் பிடி செல்வக்குமார். இவர், கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்ந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

திமுகவில் இருந்து விலகல்

இந்நிலையில் தான் பிடி செல்வக்குமார் திமுகவில் இருந்து விலகி உள்ளாார். இதுதொடர்பாக பிடி செல்வகுமார் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுகிறது நான் தங்கள் இயக்கத்தில் இணைந்தேன். எனக்கு மாநில வர்த்தகர் அணியில் துணை செயலாளர் பொறுப்பு தந்தீர்கள். அதற்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கலையரங்கம் கட்டி தந்துள்ளேன்.

திராவிட முன்னேற்ற கழகம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில், குமரி மக்களுக்கு மேலும் அதிரடியாக நல்ல செயல் திட்டங்களை செய்ய எண்ணியிருந்தேன். காலம் எனக்கு அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுகிறது.

எனவே குமரி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் திமுகவில் இருந்து விலகி மீண்டும் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக எனது பணியை தொடர விரும்புகிறேன். காலம் மாறும் மாற்றமே மானுட தத்துவம் என்ற அடிப்படையில் என்றும் மக்களுக்காக நற்பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

என்ன காரணம்?

இதற்கிடையே தான், அவரது விலகிலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிடி செல்வக்குமார் கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது திமுகவில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

admin

Recent Posts

PMEGP / NEEDS SCHEME: தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன் || Tamil Nadu government subsidy loan 10L

PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More

9 hours ago

Govt Scheme: TVK 4000 Rupees Scheme Eligibility வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

TVK 4000 Rupees Scheme Eligibility: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான… Read More

2 days ago

Tata launches 2026 Tiago EV with 4.69 Lakh BaaS entry price

Tata launches 2026 Tiago EV: The Indian car market is changing fast, moving towards green… Read More

1 week ago

Top Budget Friendly Best Electric Bike in India Picks

Best Electric Bike: The streets of our nation are changing fast. With fuel costs going… Read More

1 week ago

Earn mony on online 2026 best method you must try

Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More

1 week ago

நடுத்தர மக்களின் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகிறது! பட்ஜெட் விலையில் Tata Tiago EV Facelift!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More

2 weeks ago