Advertisement
Categories: Service

சொந்த வீடு கனவை நனவாக்கும் அரசின் திட்டம்.. முதலமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு தகுதியான பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பெயரில் இலவச வீடு 2025 நிலம் வீடு இல்லாதவர்களுக்கு 2 மிக முக்கிய தகவல் free home scheme

Direct link of online free home apply : https://pmaymis.gov.in

Pm free home scheme website link : https://pmaymis.gov.in/

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு விதமான திட்டங்கள் குறித்து பேசினார். அந்த வகையில் ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் பேசியுள்ளார்.

ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு விதமான திட்டங்களை பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்ட நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள தகவலில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகையாக ரூ. 1,20,000 வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசு ரூ. 48,000 மற்றும் ஒன்றிய அரசு 72,000 ரூபாயும் வழங்குகிறது.

மேற்கூரை அமைப்பதற்காக கூடுதலாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது. 2021-2022 ஆண்டு வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் இதுவரை 3,43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை கட்டுவதற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

வீடு கட்டுவற்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளோம்.

ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாலே, நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

admin

Recent Posts

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

2 weeks ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

2 weeks ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

3 weeks ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

3 weeks ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

3 weeks ago

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

2 months ago