பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு தகுதியான பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பெயரில் இலவச வீடு 2025 நிலம் வீடு இல்லாதவர்களுக்கு 2 மிக முக்கிய தகவல் free home scheme
Direct link of online free home apply : https://pmaymis.gov.in…
Pm free home scheme website link : https://pmaymis.gov.in/
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு விதமான திட்டங்கள் குறித்து பேசினார். அந்த வகையில் ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் பேசியுள்ளார்.
ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு விதமான திட்டங்களை பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்ட நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள தகவலில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகையாக ரூ. 1,20,000 வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசு ரூ. 48,000 மற்றும் ஒன்றிய அரசு 72,000 ரூபாயும் வழங்குகிறது.
மேற்கூரை அமைப்பதற்காக கூடுதலாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது. 2021-2022 ஆண்டு வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் இதுவரை 3,43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை கட்டுவதற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
வீடு கட்டுவற்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளோம்.
ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாலே, நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More