கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழே குறைந்து விட்டதால் பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர கடைபிடித்து பள்ளிகளைத் திறக்கலாம் என ஒரு சாராரும், புயல், பருவமழை என வானிலை மாறியுள்ள நிலையில் பிற தொற்றுகளும் பரவ வாய்ப்புள்ளதால் தை பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். எனவே இந்த மாத இறுதியில் அடுத்த மாதத்துக்கான ஊரடங்கு தளர்வு, பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிடும் போது பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு -அரையாண்டு தேர்வு ரத்து: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு எந்த நேரமும் அரசு தயார் நிலையில் உள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் கல்வி மூலம் அதிக கட்டணம் வசூலித்த 14 கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்சி எஸ்டி, போஸ்டு மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தற்போது வரை நிறுத்தப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆங்காங்கே அதற்கான உதவி தொகையை அரசு வழங்கி வருகிறது எனவும் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More