கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழே குறைந்து விட்டதால் பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர கடைபிடித்து பள்ளிகளைத் திறக்கலாம் என ஒரு சாராரும், புயல், பருவமழை என வானிலை மாறியுள்ள நிலையில் பிற தொற்றுகளும் பரவ வாய்ப்புள்ளதால் தை பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். எனவே இந்த மாத இறுதியில் அடுத்த மாதத்துக்கான ஊரடங்கு தளர்வு, பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிடும் போது பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு -அரையாண்டு தேர்வு ரத்து: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு எந்த நேரமும் அரசு தயார் நிலையில் உள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் கல்வி மூலம் அதிக கட்டணம் வசூலித்த 14 கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்சி எஸ்டி, போஸ்டு மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தற்போது வரை நிறுத்தப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆங்காங்கே அதற்கான உதவி தொகையை அரசு வழங்கி வருகிறது எனவும் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More