கொரானா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு புதுச்சேரி கல்வி பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மனுவில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் மேல்நிலை கல்வியில் சேர்வதற்கும் பாலிடெக்னிக் ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த கல்வியில் சேர்வதற்கு அவசியம் நடத்தப்படும் என்ற நிலைக்கு வந்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளன ஆனால் இந்த அசாதாரண சூழலில் தேர்தல் நடத்துவதால் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்கள் இவர்களுக்கு தோற்று உருவாக வாய்ப்புகள் உண்டு குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வை அவசரமாக நடத்துவதால் நோய்த்தொற்று சூழல் ஏற்படலாம்.
அரசு தொலைக்காட்சி ஊடகம் இணையம் மூலமும் நடத்தும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் பெரும்பாலான மாணவ மாணவிகளை சென்று சேர்வதில் பல இடர்பாடுகள் உள்ளன.
அசாதாரண சூழல் மாணவர்களிடத்தில் கற்பதற்கு சாதகமற்ற எதிர்மறையான உளவியல் அழுத்தங்களை உருவாக்கியுள்ளது பள்ளிச் சூழலில் சில வாரங்களாவது படித்த பின்பு தேர்வு வேண்டும் என்றும் அரசு பள்ளி தரப்பில் கோரிக்கை எழுகிறது அப்படி ஒரு மாதம் சென்றாலும் அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று உறுதியாக கூற இயலாது குறைந்தபட்சம் ஒரு மாதம் பத்தாம் வகுப்பு ஒதுக்கிவிட்டால் புதிய பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு மையம் பள்ளிகளில் மற்ற வகுப்பு குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற பத்தாம் வகுப்பு மாணவர்களும் 11ஆம் வகுப்பு காலத்தில் ஒரு மாதத்தை இழக்க நேரிடும் பெரும்பாலான மாணவர்களும் ஆசிரியர்களும் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பொதுப் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் சமூகம் பரவலாக உருவாக வாய்ப்பளிக்கும் தேர்வு நடத்துவதும் விடைத்தாள் திருத்தும் பொழுது கவனம் முன்னெச்சரிக்கை சமூக இடைவெளியை கையை கழுவுதல் பின்பற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் ஆகியவை பல இடர்பாடுகள் ஏற்படுத்தும் அதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இல்லை என்று அறிவிக்கலாம்.
ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அதிகரித்து வருகிறது நடப்பாண்டில் 97% தேர்ச்சி அடைந்து இருக்கும் அதற்கு பதிலாக அனைவரும் தேர்ச்சி என்றால் பள்ளி மாணவர்களில் ஏறத்தாழ மூன்று சதவீதத்தினரும் தனித்தேர்வர்கள் குறைந்த அளவிலும் தேர்ச்சி பெறுவர் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களால் கணிக்க முடிந்த பாடப்பிரிவுகளில் தொழில் பிரிவில் சேர்வார்கள் மேலும் கல்வி துறையானது திருப்புதல் தேர்வுகளில் மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்களின் சராசரி அனைத்தையும் அதன் வளர்ச்சியையும் அறிவதற்கு முடியும் அந்த மதிப்பெண்கள் EMIS தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன அதனடிப்படையில் ஏ பி சி என்ற மூன்று நிலைகளில் தரமுடியும் தனித்தேர்வர்களுக்கு சீக்கிரம் வரலாம் தானே பேரிடர் கால சிறப்பு சான்றிதழ் பெயர் வயது போன்ற வழக்கமான சான்றிதழ் போல இடம்பெற செய்யலாம் தேர்வு இல்லாவிட்டாலும் அனைத்து சிக்கல்களுக்கும் இந்தச் சான்று தீர்வாக இருக்கும் மேல் அணிவகுப்புகள் தொழில் பிரிவுகளில் சேர்ந்து தனது எதிர்காலத்தை அறிவிக்க அடுத்த தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது கட்டாயம் நடைபெறும் என்றும் கோரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பிறகு பொதுத்தேர்வு அட்டவணை இருந்து வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஏற்கனவே வந்து தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More