Advertisement

தமிழக அரசு புதிய அறிவிப்பு மீன்பிடித் தடை காலத்திற்காக 5000 ரூபாய் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானங்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் மே 3-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது பல மாநில அரசுகளும் ஊடகங்கள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் உள்ளது இதன் காரணமாகவும் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர் இந்த நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால மீனவர்களுக்கு நிவாரணமாக தலா 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதேபோல நல வாரிய உறுப்பினர்களுக்கு உள்ள மீனவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரணம் வங்கியில் செலுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களுக்கு ஜூன் முதல் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால இதிலுள்ள மீனவர்களுக்கு நிவாரணமாக 1000 ரூபாயும் வழங்குவதற்கு ரூபாய் 83.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராதாம்! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More

8 hours ago

ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்

நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More

8 hours ago

ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி

சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More

8 hours ago

கோவை வருகிறார் பிரதமர் மோடி… பாஜக சார்பில் பூமிபூஜை!

கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More

4 days ago

இறப்புச் சான்றிதழ் எப்படி பதிவு செய்வது? Death certificate how to apply

தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More

6 days ago

திமுகவுக்கு ‘குட்பை’.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More

1 week ago