சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் தையல் இயந்திரத்தைப் பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூகநலத் துறை மூலம் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதைப் பெற மாத வருமானம் ரூ. 12,000-க்குள் இருக்க வேண்டும். இருப்பிடம், தையல் பயிற்சி, வயது, சாதிச் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் என்பதற்கான சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்
1, வயதுச் சான்றிதழ்
2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
3, வருமானச் சான்றிதழ்
4, ஆதார் அட்டை
5, அனுபவ சான்று
6, மொபைல் எண்
7, சொந்த கையொப்பம்
8, சாதி சான்றிதழ்
9, இருப்பிடச் சான்றிதழ்
10 உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்
11,கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது உதவி சான்றிதழ்
தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், முகவரி தமிழ்நாட்டில் இருத்தல் வேண்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும் (இந்த சான்றிதழை உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் நீங்கள் பெறலாம்) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
மகளிர்சுய உதவிக் குழுக்களின் மூலம் பயிற்சி பெற்று பெறப்பட்ட சான்றிதழ்களையும் ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கலாம்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள
1. சமூக நலத்துறை
2. சமூகநலத்துறை வளாகம் (உங்கள் மாவட்டத்தின் பெயர்)
என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சென்றோ கொடுக்கலாம்.
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More