தமிழ்நாடு பதிவுத் துறையில் விரைவில் வேலைவாய்ப்பு 2020 செய்திகள் Tamil Nadu Registration Department NEWS 2020
தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு?
பட்டியல் அனுப்ப ஐஜி உத்தரவு
சென்னை , மார்ச் 4: தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரத்தை அனுப்ப அனைத்து துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு பதிவுத்துறை ஐஜி உத்தர விட்டுள்ளார். Tamil Nadu Registration Department Jobs Opening Shortly
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள், 40 மாவட்ட பதிவாளர்கள் அலுவலகங்கள், 11டிஐஜி அலுவலகங்கள், 22 ஏஐஜி அலுவலகங்கள் உள்ளன. இதில் கூடுதல் டிஐஜி, ஏஐஜி, மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்கள். உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அலுவலக பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை வாய்ப்ப
இதுதொடர்பாக பதிவுத்துறை அலுவலர் சங்கத்தினர் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . உதவியாளர்கள் இல்லாமல் அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, அலுவலக பணியிடங்கள் காலிபணியிடம் விவரத்தை தெரிவிக்குமாறு பதிவுத்துறை தலைவர் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். All Over Tamil Nadu Registration Department Office Job Vacancies Details
இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அலுவலங்களில் பணிப்பளுவின்அடிப்படையில் அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்பப்பட வேண்டியது தவிர்க்க இயலாத என கருதப்படும் அலுவலகங்களை பட்டியலிட்டு, அவ்வலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணிக்காலியிடம் நிரப்பப்பட வேண்டியது அவசியம் குறித்து தங்களது விரிவான அறிக்கையை உடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More
A ration card is an essential government-issued document that allows families to access subsidised food… Read More
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, கல்லூரி மாணவ மற்றும் மாணவியருக்கான மாதாந்திர கல்வி… Read More