Advertisement

தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது

சென்னை: தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ் கலப்படமில்லாத தூய தனி மொழி. உலக முதல் தாய்மொழியின் 80 சதவீத சொற்கள் இன்றைய தமிழில் உள்ளன. சங்க காலத்திற்கு முந்தைய தமிழில் 100 சதவீத சொற்கள் முதல் தாய்மொழி சொற்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தூய தமிழில் பேசினால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழில் பேசுவோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தகுதியோடையோர் சொற்குவை.காம் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நாடறிந்த தமிழ் பற்றாளர்கள் இருவரிடம் தமது தமிழ் பற்றை உறுதி செய்து சான்றிதழ் பெற்று, சுய விவர குறிப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, நற்சான்றிதழ் அளிக்கும் தமிழறிஞர்களின் ஒருபக்க அளவிலான தனது விவர குறிப்புகளையும், ஒளிபடத்துடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

admin

Recent Posts

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 week ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 weeks ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

3 weeks ago