கொரோனா உளவியல்…..
நம் நாட்டின் கொரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம், இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லை…… 😎
ஏன்…??!
உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும்.
“குப்ளர் ரோஸ் மாடல்” என்று ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, மனிதனுக்கு ஏதேனும் துக்க நிகழ்வு, இயற்கை பேரிடர், விபத்து போன்றவை நடக்கும் போது, அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான்.
அவை….
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression
5.Acceptance
1.Denial –
அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை நம்ப மறுப்பது. உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கொரொனா வராது என்று மறுத்தது. அப்படியே வந்தாலும், நமது ஊர் வெயிலில் அது பரவாது என்று மீண்டும் மறுத்தது… 🤫
2.Anger –
கோபம் கொள்வது. உதாரணத்திற்கு , ஊரடங்கு போட்டு விட்டார்களே, வருமானம் பாதிக்குமே, இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே என்று கோபம் கொண்டது. 😠
3. Bargain –
கொரோனா வராமல் இருந்திருக்கலாமே , ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே என்று உள்ளுக்குள் புலம்புவது. 😷
4. Depression –
இப்படி ஆகிவிட்டதே என்று மன அழுத்தம், மனச்சோர்வு அடைவது. 😢
5. Acceptance –
கடைசி கட்டம். வேறு வழியில்லாமல் , அதை ஏற்றுக்கொள்வது. அதாவது….. கொரோனாவுடன் வாழப் பழகிக்கொண்டது 😂😂
இந்த 5 நிலைகள், கொரோனாவிற்கு மட்டுமல்ல. மனித வாழ்வில் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளக்கும் பொருந்தும்.
புத்திசாலி என்ன செய்வான் ?….
“இதுவும் கடந்து போகும்” என்று உணர்ந்து , முதல் நிலையிலிருந்து நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மன அழுத்தம் இல்லாமல், வாழ்வில் முன்னேற்றம் அடைவான். 💪
ஐந்தாம் நிலைக்கு செல்லமுடியாமல் சிக்கிக்கொள்பவன், மன அழுத்தம் ஏற்பட்டு, மனநோயாளியாகிறான் ! 😴
ஆக,
உணர்வோம்… தெளிவோம்….
தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, வெல்வோம்….
இதுவும் கடந்து போகும் !
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More