ரஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக விஜய்யுடன் நான்காவது முறையாக இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்கார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெப்ரவரியில் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
முருகதாஸ் தற்போது ரஜினி படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். ரஜினி படத்தை முடித்த பிறகு முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை தொடர்ந்து விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இந்த நிலையில், விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி 2’ படம் கண்டிப்பாக வரும் என்று தெரிவித்தார். இதன் மூலம் நான்காவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைவது உறுதியாகி இருக்கிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More