Advertisement
Service

பிஎம் கிசான் திட்டத்தில் இனி 12,000 ரூபாய்.. நிதியமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2025 பட்ஜெட்டுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவசாயிகள் பிரதிநிதிகள் பல முக்கியமான விஷயங்களை நேற்று (டிசம்பர் 7) விவாதித்தனர். இந்தக் கூட்டத்தின் போது, நிதியமைச்சருடனான உரையாடலில் விவசாயிகளின் பிரதிநிதிகள், மலிவான நீண்ட கால கடன்களை வழங்கவும், குறைந்த வரி விதிக்கவும், பிஎம் கிசான் சம்மன் நிதியை இரட்டிப்பாக்கவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

விவசாயிகள் பிரதிநிதிகளுடன் 2 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயத் துறையில் உள்ள பல்வேறு சவால்களைத் தீர்க்கும் நோக்கில் முன்மொழிவுகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.நிதி நிவாரணம், சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் மூலோபாய முதலீடுகளில் கவனம் செலுத்துவது ஆகியவை இக்கூட்டத்தில் இடம்பெற்ற முக்கிய கோரிக்கைகள் ஆகும். பாரத் கிரிஷக் சமாஜ் தலைவர் அஜய் வீர் ஜாகர் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.

விவசாயக் கடனுக்கான வட்டி வீதத்தை 1 வீதமாகக் குறைத்தல் மற்றும் பிஎம் கிசான் சம்மன் நிதியின் தவணையை 6000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பாரதீய கிசான் யூனியன் (BKU) தலைவர் தர்மேந்திர மாலிக், நில வாடகை, விவசாயக் கூலி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செலவுகளைச் சேர்த்துக் கோரி, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பொறிமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். விவசாய இயந்திரங்களின் விலையை நிறுவனத்தின் இணையதளங்களில் காட்ட வேண்டும், மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், 23 பொருட்களுக்கு மேல் எம்எஸ்பி கவரேஜை விரிவுபடுத்த வேண்டும், எம்எஸ்பி அளவை விட குறைவான இறக்குமதியை அனுமதிக்கக் கூடாது, அவசரகாலத்தில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

admin

Share
Published by
admin

Recent Posts

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

2 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

2 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago

Govt Is Giving 10 Lakh Rupees Easy Loan To Youth Under This Scheme Aadhaar Card Needed

ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More

2 weeks ago

பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கும் மத்திய அரசு; PM Internship திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடக்கம்!

கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More

2 weeks ago