Advertisement
Categories: Service

பிஎம் கிசான் திட்டத்தில் இனி 12,000 ரூபாய்.. நிதியமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2025 பட்ஜெட்டுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவசாயிகள் பிரதிநிதிகள் பல முக்கியமான விஷயங்களை நேற்று (டிசம்பர் 7) விவாதித்தனர். இந்தக் கூட்டத்தின் போது, நிதியமைச்சருடனான உரையாடலில் விவசாயிகளின் பிரதிநிதிகள், மலிவான நீண்ட கால கடன்களை வழங்கவும், குறைந்த வரி விதிக்கவும், பிஎம் கிசான் சம்மன் நிதியை இரட்டிப்பாக்கவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

விவசாயிகள் பிரதிநிதிகளுடன் 2 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயத் துறையில் உள்ள பல்வேறு சவால்களைத் தீர்க்கும் நோக்கில் முன்மொழிவுகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.நிதி நிவாரணம், சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் மூலோபாய முதலீடுகளில் கவனம் செலுத்துவது ஆகியவை இக்கூட்டத்தில் இடம்பெற்ற முக்கிய கோரிக்கைகள் ஆகும். பாரத் கிரிஷக் சமாஜ் தலைவர் அஜய் வீர் ஜாகர் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.

விவசாயக் கடனுக்கான வட்டி வீதத்தை 1 வீதமாகக் குறைத்தல் மற்றும் பிஎம் கிசான் சம்மன் நிதியின் தவணையை 6000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பாரதீய கிசான் யூனியன் (BKU) தலைவர் தர்மேந்திர மாலிக், நில வாடகை, விவசாயக் கூலி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செலவுகளைச் சேர்த்துக் கோரி, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பொறிமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். விவசாய இயந்திரங்களின் விலையை நிறுவனத்தின் இணையதளங்களில் காட்ட வேண்டும், மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், 23 பொருட்களுக்கு மேல் எம்எஸ்பி கவரேஜை விரிவுபடுத்த வேண்டும், எம்எஸ்பி அளவை விட குறைவான இறக்குமதியை அனுமதிக்கக் கூடாது, அவசரகாலத்தில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

admin

Share
Published by
admin

Recent Posts

NLM-EDP மூலம் கழுதை வளர்ப்பு ஊக்குவிக்கிறது

தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More

3 days ago

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராதாம்! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More

7 days ago

ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்

நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More

7 days ago

ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி

சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More

7 days ago

கோவை வருகிறார் பிரதமர் மோடி… பாஜக சார்பில் பூமிபூஜை!

கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More

2 weeks ago

இறப்புச் சான்றிதழ் எப்படி பதிவு செய்வது? Death certificate how to apply

தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More

2 weeks ago