Advertisement
Categories: Uncategorized

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் ஒரு நீண்ட கால முதலீட்டு விருப்பமாகும். பாதுகாப்பு, வருமானம் மற்றும் வரி சலுகைகள் ஆகியவை PPF முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அரசாங்க ஆதரவுடைய PPF முதலீடுகள், உங்கள் முதலீடு பாதுகாப்பானதாக்குகிறது. கடன் விருப்பங்கள் மற்றும் ஒரு குறைந்த பராமரிப்பு செலவுகள் இத்திட்டத்திற்கு கூடுதல் போனஸ்.https://d-17538425554176891455.ampproject.net/2106182132000/frame.html

பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் PPF கணக்கை நீங்கள் திறக்கலாம். எப்படி அஞ்சல் அலுவலகத்தில் உங்கள் PPF கணக்கை தொடங்குவது என்று இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

தகுதிகள்

ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சுய வேலைவாய்ப்பு அல்லது வேறு எந்த பிரிவாக இருந்தாலும் PPF கணக்கிற்கு தபால் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஒரு கணக்கு மட்டுமே

ஒருவர், ஒரு PPF கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும். நீங்கள் இரண்டு கணக்குகளைத் திறந்துவிட்டால், அது இரண்டாவது கணக்கை மூடுவதற்கு வழிவகுக்கும், மற்றும் முக்கிய தொகை மட்டும்தான் திரும்பித்தரப்படும் அதற்க்கு வட்டி திரும்ப தரப்படாது.

மைனர்களுக்கு கணக்கு

சிறுவர்களுக்கும் PPF கணக்கை திறக்க முடியும். தந்தை அல்லது தாயார் அவர்கள் சார்பாக கணக்கு திறக்க முடியும். தந்தை மற்றும் தாய் இருவரும் ஒரே சிறுவருக்கு கணக்கைத் திறக்க முடியாது, அவர்களில் ஒருவர் மட்டுமே ஈடுபட வேண்டும். பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, இந்த கணக்கைத் தொடர முடியாது, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை அவர்களுக்கு திருப்பிச் செலுத்தபடும்.

என்ஆர்ஐ

என்ஆர்ஐ-கள் (NRI) ஒரு PPF கணக்கைக் திறக்க முடியாது. இந்தியாவில் வசிக்கும் ஒருவர் PPF கணக்கு வைத்திருந்தால், பின்னர் அவர்கள் ஒரு NRI ஆனால் அவர் 15 ஆண்டுகள் மட்டுமே கணக்கு தொடரலாம்.

தேவையான ஆவணங்கள்

PPF கணக்கை திறப்பதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு PPF கணக்கை தொடங்குவதற்க்கு தேவையான ஆவணங்கள் பட்டியல் இங்கே.

சமீபத்தில் எடுக்கபட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
முகவரி சான்று
அடையாள சான்று
பான் அட்டை
வைப்பு தொகை (குறைந்தபட்சம் ரூ .100)

அஞ்சல் அலுவலகத்தில் PPF திறப்பதற்கு ஒரு சில முன்நிபந்தனைகள் மட்டுமே உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லா உங்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு அஞ்சல் அலுவலகத்திர்க்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரை சந்திக்க வேண்டும்.

செயல்முறை:

அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை அல்லது துணை அஞ்சல் அலுவலகத்தை கண்டுபிடித்து அங்கே போகவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து PPFகணக்கு ஆரம்பிக்க தேவையான படிவத்தை பூர்த்தி செய்யவும். நீங்கள் இணையத்திலிருந்து படிவத்தை டவுன்லோட் செய்யலாம். படிவத்தில் வழங்கப்பட்ட இடத்தில் உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி அதனுடன் கையெழுத்திடுங்கள்.https://d-17538425554176891455.ampproject.net/2106182132000/nameframe.htmlAdvertisementAdvertisement

அவசியமான ஆவணத்தின் புகைப்பட நகலை படிவத்துடன் சேர்த்து, உங்கள் வைப்புத் தொகையுடன் தபால் அலுவலக நிர்வாகிக்கு சமர்ப்பிக்கவும்.

வட்டி விகிதம்

1.04.2017 முதல், PPF கணக்கின் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.9% (கூட்டு ஆண்டுக்கு) ஆகும். தொடக்கக் கணக்குக்கான குறைந்தபட்ச தொகை ரூ. 100 ஆகும். குறைந்தபட்சம் ரூ 500 மற்றும் ரூ .150,000 ஆகியவை நிதி ஆண்டில் அதிகபட்சமாக டெபாசிட் செய்யப்படலாம்.

வழிமுறைகள்

ஒரு நபருக்கு ஒரு PPF கணக்கை தனது பெயரில் திறக்க முடியும். PPF கூட்டுக் கணக்கு துவங்குவதற்க்கு எந்தவிதமான வாய்ப்பு இல்லை.

கணக்கு வைத்திருப்பவர் PPF கணக்கிற்காக nomineeகளை நியமிக்கலாம். PPF கணக்கிற்கு அதிகபட்சமாக நான்கு பேர் நியமிக்கப்படலாம்.

பிபிஎஃப் கணக்கிற்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். கணக்கு வைத்திருப்பவர் கணக்கின் காலவரை நீட்டிக்க விரும்பினால், அவர் அதை நீட்டிக்க முடியும். இந்த கால நீடிப்பு 5 ஆண்டுகள். 7 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் PPF கணக்கை திரும்பப் பெற முடியாது.

PPF கணக்கு வைத்திருப்பவர்கள் 3வது ஆண்டின் தொடக்கத்தில் PPF க்கு எதிராக கடன் பெறலாம்.

பொறுப்பாகாமை

IT சட்டம் 80Cஇன் படி தபால் அலுவலகங்களில் PPF வைப்புத்தொகை வருமானத்தில் இருந்து குறைப்பதற்க்கு வாய்ப்பு உள்ளது . தபால் அலுவலகத்தில் PPF கணக்கைத் திறக்க விரும்பாத ஒருவர் SBI, PNB, HDFC போன்ற முன்னணி வங்கிகளில் ஒரு கணக்கைப் பெற முடியும்.

admin

Recent Posts

Earn mony on online 2026 best method you must try

Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More

15 hours ago

நடுத்தர மக்களின் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகிறது! பட்ஜெட் விலையில் Tata Tiago EV Facelift!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More

2 days ago

SSC CGL 2026 Notification Officially Released! 12200+ Vacancies Announced for Various Group B & Group C Posts Across Central Government

The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More

3 days ago

தொழிலாளர் நல வாரியத்தில் அரசு சலுகைகள் என்ன கிடைக்கும் ?

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More

1 week ago

Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More

1 week ago

விவசாயி பயிர்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More

1 week ago