Advertisement

மத்திய அரசின் மலிவு விலையில் வீடு கனவு திட்டம் மீண்டும் ஓராண்டு நீட்டிப்பு நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை மீட்டெடுப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி நிவாரண சலுகைகளை அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்து இருந்தார்.
அது குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்து வருகிறார் முதல் கட்டமாக ரூபாய் 5.94 லட்சம் கோடி கடன் திட்டங்கள் குறித்த அறிவிப்புக்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மே 13 ஆம் தேதி அன்று அறிவித்தார் இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக ரூபாய் 3.16 லட்சம் கோடி கடன் திட்டங்கள் குறித்த அறிவிப்புக்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மே 14ஆம் தேதியன்று அறிவித்தார்.

எப்படி விண்ணப்பிப்பது முழுமையான தகவல் வீடியோவில்

மத்திய அரசினுடைய பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் அனைவருக்கும் வீடு திட்டம் என்று கூறப்படுகிறது இது மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் இத்திட்டம் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதங்கள் மீது மானியம் வழங்கப்படுகிறது இது திட்டம் மூலம் வங்கிகள் வீட்டுக் கடன் வாங்கியோருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது நடுத்தர ஆண்டு வருமானம் 1 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை, நடுத்தர வருமானம் என்பது 12 லட்சம் முதல் 18 லட்சம் ரூபாய் வரை கொண்டவர்கள் ஆகியோருக்கு வந்து தற்போது பலன் பெற்று வருகிறார்கள் இத்திட்டம் 2017ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு மார்ச் 31 2020 வரை முடிவடைந்தது இந்த நிலையில் அனைவருக்கும் வீடு திட்டம் கீழ் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவதற்கான வட்டி மானியம் இன்னும் ஓர் ஆண்டிற்கு தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார் அதாவது 2020-ல் மார்ச் மாதத்துடன் முடிந்த இந்த திட்டம் 2021 மார்ச்சு வரை நீட்டிக்கப்படுகிறது இதன் மூலம் 2.5 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு நீட்டிப்பு செய்யப்படுவதால் இரும்பு சிமெண்ட் போக்குவரத்து துறையில் தேவை அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும் என மத்திய அரசு கருதுகிறது.

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

3 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

3 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago