Advertisement
GOVT JOBS

முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சார்பான விவரங்கள்

Chief Minister’s Girl Child Protection Scheme 2021:

முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சார்பான விவரங்கள்

நோக்கம்: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பொருள்வளம் போல், மனித வளத்தை மேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் முக்கியமானது என்பதால் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு என முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தினை சென்னை மாவட்டத்தில் சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

The scheme aims to:

  • Promote enrollment and retention of the girl child in school and ensure her education at least up to intermediate level.
  • Encourage girls to get married only after the age of 18 years.
  • Encourage parents to adopt family planning norm with two girl children.
  • Protect the rights of the girl child and provide social and financial empowerment to the girl child.
  • Strengthen the role of the family in improving the status of the girl child.

தகுதிகள்
  1. பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
  2. பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
  3. வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.
  4. இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Tamil Nadu Government Scheme for Girl Baby Eligibility Criteria

திட்ட விவரம்: Scheme Details

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 1992 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான உரிமை அளிக்கப்பட்டு, ஏழை குடும்பத்திற்கு சில சரிபார்க்கத்தக்க நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகையுடன் கூடிய வைப்புத் தொகை 18 வயது முடிவில் அளிக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொடர் நடவடிக்கை: HOW TO APPLY

தற்போது பொது சேவை மையத்தில் விண்ணப்பத்தாரர்களால் விண்ணப்பிக்கப்படுகிறது. விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள். மாவட்ட சமூகநல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, சரியான விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

1992 முதல் 2001 வரை தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழகத்தின் மூலமும், 2002 முதல் நாளது வரை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலமும் கீழ்கண்டவாறு வைப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் 1: Scheme – 1

இத்திட்டத்தின் கீழ்  அன்றோ அல்லது பிறகோ பிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.

  • 1 பெண் குழந்தை  க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000/-
  • 1 பெண் குழந்தை  க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/-

மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

திட்டம் 2: Scheme 2

இத்திட்டத்தின் கீழ்  அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.

  • க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ. 25,000/-

மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

திட்டம் 3: Scheme 3

இத்திட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் 1 பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/- வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.

 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ.25,000/-

மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன்,கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.​

Impact of the Scheme

The increasing trend in the female literacy of Tamil Nadu from 64.55% in 2001 to 73.44% in 2011 and the reduction in the dropout rate of girl children can also be attributed to the scheme. So far 868077 beneficiaries have been benefitted under this scheme from .

admin

Recent Posts

Aadhaar Recruitment 2026 Notification Out Now!

📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More

6 days ago

Thalapathy Vijay’s Final Film Jana Nayagan Set for May 8

Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More

2 weeks ago

Assam HS Class 12 Result 2026 Declared: Check Scores, Marksheet Via

NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More

2 weeks ago

NLM-EDP மூலம் கழுதை வளர்ப்பு ஊக்குவிக்கிறது

தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More

3 weeks ago

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராதாம்! மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More

4 weeks ago

ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்

நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More

4 weeks ago