Advertisement

மூன்றாம் கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ரூபாய்1000 வழங்கப்பட உள்ளது.

மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு

Notification link: Click Here

பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூபாய் 1000 நிவாரணத் தொகையை வழங்க தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை உடனடியாக மாநகராட்சியிடம் வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூபாய் 1000 நிவாரணத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவுசெய்யப்பட்ட 27,195 சாலையோர வியாபாரிகளில், இதுவரை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, கைபேசி எண், மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை வழங்கிய, 14,633 சாலையோர வியாபாரிகளுக்கு, நிவாரண தொகையாக முதல் கட்டமாக 1000 மற்றும் இரண்டாம் கட்டமாக 1000, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம் கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ரூபாய்1000 வழங்கப்பட உள்ளது.

இதில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை பெற பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுக்கு வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை (நகல்) எண், கைபேசி எண், வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண் (IFSC)குறியீட்டு எண், போன்ற விவரங்கள் கொண்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மண்டலத்தில் வழங்கும் பட்சத்தில், நிவாரணத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் மாற்ற இயலும், எனவே இந்த வாய்ப்பை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையாளர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

admin

Recent Posts

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

2 weeks ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

4 weeks ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

1 month ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

1 month ago