அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்; 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்து தேர்வு மற்றும் பணி அனுபவத்திற்கும், மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
எழுத்துத்தேர்வில் 200 மதிப்பெண்களும் பணி அனுபவத்திற்கு 30 மதிப்பெண்களும் என 230 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 7,918 உதவி விரிவுரையாளர் பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்பட உள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் அனுபவம் மதிப்பெண்கள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப ஓராண்டிற்கு இரண்டு மதிப்பெண்கள் விதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கும், தமிழ் மொழி பாடத் திறனுக்கான கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து தாள் இரண்டில் தொடர்புடைய பாடங்களுக்கான 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரத்திற்கு தேர்வு நடைபெறும். அதன் பின்னர் 30 மதிப்பெண்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
📢 Aadhaar Recruitment 2026 Notification Out Now! CSC e-Governance Services India Ltd மூலம் Aadhaar Supervisor… Read More
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More