மே இறுதியில் 5.35 லட்சம் பேர் பாதிப்பு; 38 ஆயிரம் பேர் சாவு: பீதி கிளப்பிய கணிப்பை பொய்யாக்கிய ஊரடங்கு
நிபுணர்களையே குழப்பிவிட்ட கொரோனா.
புதுடெல்லி:
‘மே மாத இறுதியில் நாட்டில் 5.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். 38 ஆயிரம் பேர் இறப்பார்கள்’ என நாட்டின் நான்கு முக்கிய அமைப்புகள் கடந்த மாதம் கூறிய கணிப்பு பொய்யாகி இருக்கிறது.
அதில், ‘கொரோனாவால் இப்போது (ஏப்ரல்) பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பீடு செய்ததில் மே மாதம் இறுதியில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.35 லட்சமாக இருக்கும். உயிரிழப்பு எண்ணிக்கை 38,220 ஆக உயரக்கூடும். மே 5ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 3,258 பேரும், மே 12ம் தேதி வரையிலான 2வது வாரத்தில் 10,924 பேரும், மே 19ம் தேதி வரையிலான 3 வாரத்தில் 38,220 பேரும் இறப்பார்கள். எனவே, நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் 76 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படும். இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கு தற்காப்பு உபகரணங்கள், செயற்கை சுவாச கருவிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை போதுமான எண்ணிக்கையில் இருப்பு வைத்துக்கொள்வது அவசியம்,’ என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
நேற்று வரையில் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை கூட தாண்டவில்லை. பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்துக்குள் உள்ளது. சில நேரங்களில், மெத்த படித்தவர்களின் கணிப்புகள் பொய்யாகும் என்பதற்கு இந்த ஆய்வறிக்கை ஒரு உதாரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More