Advertisement

மே மாத இறுதியில் நாட்டில் 5.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். 38 ஆயிரம் பேர் இறப்பார்கள்’

மே இறுதியில் 5.35 லட்சம் பேர் பாதிப்பு; 38 ஆயிரம் பேர் சாவு: பீதி கிளப்பிய கணிப்பை பொய்யாக்கிய ஊரடங்கு


நிபுணர்களையே குழப்பிவிட்ட கொரோனா.

புதுடெல்லி:
‘மே மாத இறுதியில் நாட்டில் 5.35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். 38 ஆயிரம் பேர் இறப்பார்கள்’ என நாட்டின் நான்கு முக்கிய அமைப்புகள் கடந்த மாதம் கூறிய கணிப்பு பொய்யாகி இருக்கிறது. 

அதில், ‘கொரோனாவால் இப்போது (ஏப்ரல்) பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பீடு செய்ததில் மே மாதம் இறுதியில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.35 லட்சமாக இருக்கும். உயிரிழப்பு எண்ணிக்கை 38,220 ஆக உயரக்கூடும். மே 5ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 3,258 பேரும், மே 12ம் தேதி வரையிலான 2வது வாரத்தில் 10,924 பேரும், மே 19ம் தேதி வரையிலான 3 வாரத்தில் 38,220 பேரும் இறப்பார்கள். எனவே, நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் 76 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படும். இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கு தற்காப்பு உபகரணங்கள், செயற்கை சுவாச கருவிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை போதுமான எண்ணிக்கையில் இருப்பு வைத்துக்கொள்வது அவசியம்,’ என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

நேற்று வரையில் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை கூட தாண்டவில்லை. பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்துக்குள் உள்ளது. சில நேரங்களில், மெத்த படித்தவர்களின் கணிப்புகள் பொய்யாகும் என்பதற்கு இந்த ஆய்வறிக்கை ஒரு உதாரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

5 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago