இந்திய அரசின் ரயில்வே துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக மூன்று விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு நேர்காணல் மூலமாக ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள். யார் யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் இதில் எந்த மாதிரியான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன போன்ற முழு தகவல்களையும் இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பதவியின் பெயர் மற்றும் காலி பணியிடங்கள்
1.Nursing Superintendent-255 Vacancy
2.Pharmacist-51 Vacancy
3.Dresser/OTA/Hospital Attendant–255 Vacancy
Total Vacancies-561
கல்வித் தகுதி:
Nursing Superintendent:
நர்சிங் என்ற பணிக்கு B.sc. (Nursing) முடித்திருக்க வேண்டும்.
அனுபவம் தேவையில்லை.
Pharmacist:
10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்து இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதி இல்லை என்றால் Diploma In Pharmacy முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
B.Pharm முடித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Dresser/OTA/Hospital Attendant:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகுதி எதுவும் கிடையாது.
வயது வரம்பு:
Nursing Superintendent என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Pharmacist என்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சமாக 20 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Dresser/OTA/Hospital Attendant என்ற பணிக்க விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் அதிகபட்சமாக 33 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு களும் உள்ளன
சம்பள விவரம்:
Nursing Superintendent என்ற பணிக்கு சம்பளம் PB-2+GP-4600/-/Level-7 என்ற அளவிலும்,
Pharmacist என்ற பணிக்கு சம்பளம்PB-2+GP-4200/-/Level-6 என்ற அளவிலும்.
Dresser/OTA/Hospital Attendant என்ற பணிக்கு சம்பளம் PB-1+GP-1800/-/Level-1 என்ற அளவிலும் கொடுக்கப்படும்.
கூடுதலாக தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
மேற்கண்ட பணிகளில் எந்த பணிக்கு உங்களுக்கு தகுதி உள்ளது என்பதை நிரூபித்து கொண்டு அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பிறகு விண்ணப்பப்படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ளவும்.
நீங்கள் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை விண்ணப்ப படிவத்தில் முதலாவது இடத்தில் குறிப்பிடவும்.
விண்ணப்ப படிவத்தில் வலதுபுறத்தில் உங்களின் புகைப்படத்தை ஓட்டவும்.
விண்ணப்ப படிவத்தின் பின்பக்கத்தில் உங்களின் ஆதார் கார்டு நகல், பான் கார்டு நகல், இரண்டு புகைப்படங்கள், இருப்பிட சான்று நகல், கல்வித்தகுதி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல் மற்றும் கூடுதலாக ஏதேனும் தகுதிகள் இருந்தால் அந்த சான்றுக்கான நகல் அனைத்தையும் இணைத்து உங்களின் Self Attested சேர்த்து கீழே கொடுக்கப்பட்ட ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
E-mail ID-srdmohkur@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு இம்மாதம் 22ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணலின் அடிப்படையில் தகுதியானவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் பற்றிய விவரங்கள் பிறகு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
IMPORTANT LINKS
Earn mony on online- The digital world in India is changing fast. Many people want… Read More
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, Tata Tiago EV facelift என்ற புதிய மின்சார காரை சந்தையில் அறிமுகம்… Read More
The 12,256 vacancies referenced belong to the SSC CGL (Staff Selection Commission Combined Graduate Level)… Read More
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றுக்கு நிதியுதவி,… Read More
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட… Read More
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, கடந்த… Read More