சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’
மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது.
முதல் கட்டமாக நாளை முதல் ரயில்கள் இயங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் புறநகர் ரயில்கள் இயங்குவதுடன் , நகரப் பேருந்துகளும் இயக்கப்படுவது உறுதியாகி விட்டது.
ஆனால் கடுமையான நிபந்தனைகள் இருக்கும்.
கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஒரு பேருந்தில் 20 பேர் மட்டுமே உட்கார்ந்து வர அனுமதிக்கப்படுவார்கள்.
நிற்கும் பயணிகள் 6 அடி தூர இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே ஒரு பேருந்தில் 5 பேர் மட்டுமே நின்று கொண்டு செல்ல முடியும்.
ஆக, சென்னை நகரப் பேருந்துகளில் 25 பேர் மட்டுமே ஒரு சமயத்தில் பயணிக்கலாம்.
மெட்ரோ சென்னை மெட்ரோ ரயில்வேயில் 160 பயணிகளுடன் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More